articles

img

மலை முழுங்கி மகாதேவனும் டிஜிட்டல் சக்திமானும் - ப.தெட்சிணாமூர்த்தி

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் அதானி யின் 40-க்கும்மேற்பட்ட மோசடி குற்றச் சாட்டுகளை வரிசைப்படுத்தி வெளியிட்டது. அவைகளில் குறிப்பாக பட்டியலிடப்பட்ட அதானி நிறு வனங்கள், கடன்களுக்காக தங்களின் உயர்த்தப்பட்ட பங்குகளை அடகு வைப்பது உட்பட, அதானி குழுமம் மோசடிகளில் ஈடுபட்டது. அவை பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு மற்றும் ஊழல் என  மொத்தம் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில்  எழுந்த எதிர்ப்பு

ஆஸ்திரேலிய க்யூன்லாண்ட் மாநிலத்தின் 16.5 பில்லியன் அமெரிக்க டாலர் தன மதிப்புள்ள கார்மிச்சேல் பழுப்புநிலக்கரி சுரங்கஉரிமத்தை ரத்து  செய்ய வேண்டும்; அதானி எண்டர்பிரஸ் வெளி யேற்றப்பட வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியர்க ளால் உருவாக்கப்பட்டதுதான் அதானி தடுப்பு (Go Back Adani) கூட்டியக்கம்.ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் போராட்டங்களை சந்தித்து வரு கிறோம் என்று கௌதம் அதானி சாதாரணமாக சர்வதேச ஊடகங்களுக்குபேட்டி அளித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் ஒரு சாராரிடம் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு உள்ளது என சித்தரிக்க முயன்றார். ஆனால் அந்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஒன்றுகூடிய இவ்வியக்கத்தி னர் 2017 ஆம் ஆண்டு முழுவதும் ஆஸ்திரேலிய கடற் கரை நெடுகிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய விதவிதமான ஒன்றுபட்ட பிரச்சார இயக்கங் கள் தொடர் போராட்டங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன. பாதிக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலி யர்களின் எதிர்ப்பு உள்ளதாக 8.10.2017 ராய்ட்டர் செய்தி  நிறுவனமும் ஒரு வெகுஜன மாதிரி வாக்கெடுப்பில் 30 சதவீதத்தினரே அதானி திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழ்களும் எழுதின.  உலகம் வெப்பமயமாதல் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் ஆஸ்திரேலிய தொழில்துறைக்கு எதிராக அதானி திட்டம் மாறிவிடும் என்பதற்காக மட்டும் அந்தப் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதானி நிறுவ னத்தைப் பற்றி மிகக் குறிப்பாககார்ப்பரேட் உலகின் சர்வதேச சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி இயங்கும் ஒருமோசடி நிறுவனம் தான் அதானி நிறுவனம் என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஏராளமான செய்திக ளை வெளியிட்டிருந்தன. இதுதான் ஆஸ்திரேலியாவில் அதானி எதிர்ப்பு போராட்டத்தை உக்கிரமாக்கியது. 

தி போர்ப்ஸ் அம்பலப்படுத்திய தகவல்கள்

1988 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு 1994 இல் இந்திய சந்தையில் நுழைந்த அதானி நிறுவனம் குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் அவரது ஆதரவோடு விசுவரூபம் எடுக்கத் துவங்கியது. 2002-லிருந்து 2014 மார்ச் வரை மட்டும் 765மில்லி யன் டாலராக இருந்த அதானியின் நிறுவன வருவாய் 8800 மில்லியன் டாலராகநிகர லாபம் உயர்ந்து உயரே தாவியது என அமெரிக்க செய்தி நிறுவனமான திபோர்ப்ஸ் (17.7.2014) முதன் முதலாக செய்தி வெளி யிட்டது. அதாவது மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த இந்த காலத்தில்தான் இந்தியாவில் உள்ள அதானியின் அனல் மின் நிலையங்களுக்காக ஆஸ்திரேலிய, இந்தோனேசியா நிலக்கரிச் சுரங்கங்க ளை அதானி நிறுவனம் வாங்கியது. முக்கியமாக இந்த வணிகத்திற்காகவே ஆசியாவின் மிகப்பெரிய, அதானியின் குஜராத் முந்த்ரா துறைமுகம் உள்ளிட்ட 10 துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன. முந்த்ரா துறை முகத்திற்கென மோடி அரசிடம் 7350 ஹெக்டேர் நிலங்களைபெற்று அதையும் வேறு நி|றுவனங்களுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்ததையும் மோடி பிரதமரான உடனேயே விதிகளுக்குப் புறம்பாக அதானியின் முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு சுற்றுச்சூழல் கட லோர கட்டுப்பாட்டு மண்டல அனுமதி 16.7.2014 இல் வழங்கப்பட்டதாகவும் திபோர்ப்ஸ் கட்டுரை அம்பலப் படுத்தியது.  எர்த் ஜஸ்டிஸ் என்னும் சர்வதேச சுற்றுச்சூழல் சட்ட வியல்அமைப்புடன் என்விரோமெண்ட்டல் ஜஸ்டிஸ்  ஆஸ்திரேலியா என்னும் அமைப்பு இணைந்து நடத்திய அதானியைப் பற்றிய சர்வதேச புலனாய்வுகள் பார்வை யிடப்பட்ட நூற்றுக்கணக்கான நீதிமன்ற ஆவணங்க ளின் முடிவில் 2017 பிப்ரவரியில் அதானி அறிக்கை (அதானி ப்ரீப்) என்னும் 34 பக்க ஆவணம் வெளி யிடப்பட்டது. அதிர்ச்சியூட்டும் தகவல்களை, ஆதாரங்க ளை பட்டியலிட்ட அந்த ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டுதான் அதானி நிறுவனத்தைப் பற்றிய கட்டுரை வரிசைகளை ஏராளமான சமூக வலை தளங்கள் இணைய தள சஞ்சிகைகள், அச்சுஊடகங் கள், இந்தியாவில் என்டிடிவி,தி வயர், தி இந்து உள்ளிட்ட நிறுவனங்களும் ஏராளமான விபரங்கள் விவாதங்களுடன்பக்கம் பக்கமாக எழுதின. 

உண்மைகளை மறைத்து

15 லட்சத்திற்கும் மேலான ஆஸ்திரேலிய மக்களின் 2017 போராட்டங்களில்அவர்கள் தாங்கியிருந்த பதாகைகளில் ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு என்ற வாச கங்கள் அதானியைப் பற்றிஇடம் பெற்றியிருந்தன. சர்வதேச புலன் விசாரணை இதழான ஏபிசி போர் கார்னர்- நிறுவனத்தின் குழுவொன்று குஜராத் சென்று அதானி நிறுவனத்தைப் பற்றிய புலன் தகவல் களை திரட்டியது. அதானிக்கு ஆதரவாகச் செயல்படும் குஜராத் காவல்துறையின் சந்தேக செயல்பாடுக ளினால் தனது ஊடக சாதனங்கள் மற்றும் சேக ரிக்கப்பட்ட ஒளி ஒலி தரவுகளை குஜராத்திலிருந்து பாதுகாப்பாக கொண்டு வர முடியுமா என்ற கவலை யுடன் அந்த குழு நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவித்தன.  மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதகம் விளை விக்கும் பன்னாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் நிறு வனங்களை அம்பலப்படுத்தும் பேங்க் ட்ராக் என்னும் சர்வதேச அமைப்பொன்றுதனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்அதானியை கடுமையாகச் சாடியி ருந்தது. சட்ட விதிகளை தகர்த்து சுற்றுச் சூழலுக்கு  அழிவை ஏற்படுத்தும் வரலாற்றை அதானி நிறுவனம் கொண்டுள்ளது. அதானியின் முதன்மை திட்டமான குஜராத் முந்த்ரா துறைமுகம் இந்தியாவின் மிகப் பெரும்தனியார் துறைமுகமாகும். இதன் வளர்ச்சிக்கு விண்ணப்பிக்கும்போதே உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை அதானி நிறுவனம் அளித்தது. சதுப்பு நில காடுகளை அழித்தது உள்படபல விதி மீறல்களுடன்துறைமுகத்தின்கட்டுமானத்தை சட்ட விரோதமாக ஆதானி நிறுவனம் துவக்கியிருந்தது

மோடியின் கருணாகடாட்சம்

அதானியின் குஜராத் முந்த்ரா துறைமுக முறை கேடுகளைத் தவிரலஞ்சம் ஊழல் இரும்புத்தாது ஏற்றுமதியில் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஊழல் தடுப்பு அதிகாரிகளால் அதானி நிறுவனம் விசா ரிக்கப்பட்டது என்று பேங்க் ட்ராக்கின் அந்த செய்தி கூறி யது. கௌதம் அதானியைஇப்படி நார்நாராய் கிழித்துப் போட்ட திபோர்ப்ஸ், தி கார்டியன், நியூஸ் கார்ப் ஆஸ்தி ரேலியா, நியூயார்க் டைம்ஸ், ராய்ட்டர் நியூசிலாந்து, ஹெரால்ட் உள்ளிட்ட ஆஸ்திரேலிய சர்வதேச பத்திரிகைகள் அதானியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் குஜராத்தில்ஆட்சிசெய்த நரேந்திர மோடிஜியின் கருணை கடாட்ச கைங்கரிய ஆட்சிதான் என்பதையும் அம்பலப்படுத்தின.

மோடியின் வெளிநாட்டு பயணங்களை பட்டிய லிட்டு அங்கெல்லாம்இணைபிரியாமல் அதானியும் சென்றார்என்று இந்துஸ்தான் டைம்ஸ் (16.4.2015) அப்போதே கூறியது. 15-16.11.2014 ஜி.20 மாநாடு ஆஸ்திரேலிய பிரிஸ்பேர்னில் நடைபெற்று போது, அதானியும் உடன் சென்றார். அதானியும் மோடியும் ஆஸ்திரேலியாவில் இருந்த அப்போதுதான் சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய நிலக்கரி தொழிலுக்கு 1 பில்லியன் டாலர் கடனை அதானிக்குத் தருவதாக ஸ்டேட் வங்கி அறிவித்தது. பூமி வெப்பமாதல், சுற்றுச் சூழல் மாசுபாடு நிலத்தடி நீர் அமிலமாதல் போன்ற உலகின் பிரச்சனைகளில்  நிலக்கரி உற்பத்தி, ஏற்று மதி, இறக்குமதி ஆதரிக்கப்படவேண்டிய தொழி லல்ல என்ற சர்வதேச பொதுக்கருத்து வலுப்பெற்று வரும் நிலையில் கடல் கடந்த இத்தொழிலுக்கு ஏராள மான குற்றச்சாட்டுக்கள்அதானியின் மீது இருந்த போதும் இந்திய வங்கித்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தொகையை ஸ்டேட் வங்கி அளிப்பதாக அறிவித்தது. அதானி-மோடி நெருக்கத்தால் தான்  அதானிக்கு இந்த கடன் அறிவிக்கப்பட்டதாக ராய்ட்டர் உள்பட உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் கூறின. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட எதிர்க்கட்சிகளும் பகிரங்கமாக இதை அம்பலப் படுத்தின. இதன் தொடர்ச்சியில் இந்த கடனை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் வங்கித்துறை நிர்வா கத்திற்கு ஏற்பட்டது. அதானியின் கார்மிச்சேல் நிலக்கரித் திட்டத்திற்கு 2014 ஜுலையில் அதானிக்கு ஆஸ்திரேலிய அரசால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

அதானியை தனிமைப்படுத்திய மக்கள் போராட்டம்

வலிமையான பிரச்சாரத்தால் அதானியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவின் முதன்மை வங்கி யான காமன்வெல்த் வங்கியும் பிரிட்டனின் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியும் அதானிக்கு நிதி  உதவி செய்வதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. இத்திட்டத்திற்கும் சுரங்க முனைகளிலி ருந்து -க்யூன்ஸ்லேண்ட் மாநில அப்பாட் துறை முகம் வரையிலான ரயில்பாதைக்காக ஒரு பில்லியன் டாலர் சலுகைக் கடன் வழங்குவதற்கு ஆஸ்திரேலி யாவின் ஒன்றிய-மாநில அரசுகள் அதானி நிறு வனத்திற்குமிடையே புரிதல் ஒப்பந்தம் ஆகியிருந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆஸ்திரேலிய மக்களின் தொடர் போராட்டங்கள், தொழிற் கட்சியின் மாநில தேர்தலின் (25.11.2017) அரசியல் தேவையாக மாறியது. அதானி நிதிஉதவியை ரத்து செய்வோம் என தொழிற்கட்சி மக்களுக்கு வாக்குறுதி அளித்தது.  இதன் தொடர்ச்சியாக சீன அரசின் மிகப்பெரும் பன்னாட்டு வங்கிகளான தொழிற்துறை மற்றும் வணிக வங்கியும் சீன கட்டுமான வங்கியும் அதானிக்கு கடன் அளிக்க மறுத்துவிட்டன. சுரங்கத் தொழிலுக்கான அகழ்வுப் பணிகள், இருப்புப்பாதை அமைத்தல், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா துணை கட்டுமா னத் தொழிலின் பன்னாட்டு நிறுவனமான டாவ்ன ருடன் அதானி நிறுவனம் கூட்டு சேர்ந்திருந்தது. அந்த டாவ்னர் நிறுவனமும் அதானியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. இதன் தொடர்ச்சியில் அதானி யின் திட்டம் அப்போது கேள்விக்குறியாக மாறியது.

ஜமக்காளத்தில்  வடிகட்டிய பொய்கள்

ஆஸ்திரேலிய மக்களது போராட்டங்கள் 2017 அக்டோபரில் தீவிரமடைந்தபோது அதானி வெளியிட்ட அறிக்கைகளில், 10 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு வேலை வாய்ப்பு 22 பில்லியன் டாலர் ராயல்டி கிடைக்கும் என்ற மெகா மோசடி வாக்குறுதிகள் இருந்தன. இவை பொய் என்றும்ஆஸ்திரேலியாவிற்கு 1464 பேருக்கு மட்டுமே வேலை, 4.8 பில்லியன் மட்டுமே ராயல்டி கிடைக்கும் என்ற செய்திகள் வெளி யாயின. கார்மிச்சேல் நிலக்கரி இந்தியாவிற்கு கிடைத்தால் கோடிக்கணக்கான ஏழை இந்திய மக்கள் குறைந்த விலையில் மின் சக்தி பெறுவர் என்று செண்டிமெண்ட் டச்சுடன் அதானி ஹைப்பர்மோசடி அறிக்கையை வெளியிட்டார். இதுவும்ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய் என்பதுஅம்பலமானது.  எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA} என்ற பன்னாட்டு எரிசக்தி நிறுவனம், ஆஸ்திரேலிய நிலக்கரி இந்திய அனல் மின் நிலை யங்களில் பயன்படுத்தப்பட்டால் அதன் உற்பத்தி மின்சாரத்தின் விலை மொத்த இந்திய சராசரி விலையை விட இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும் (இந்திய மின்சக்தி விலை ஒரு விளக்க குறிப்பு, மே 2014) என்று அதற்கான அறிவியல் காரணிகளுடன் கூறியது. அதானியின் முந்த்ரா மின்சக்தி திட்டம், கவாய் அனல் மின் நிலையம்,

அதானி இயக்கும் மகராஷ்ட்ரா திரோடா மின் உற்பத்தி நிலையம், உடுப்பி மின் உற்பத்தி நிலையம் ஆகிய அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்காக உற்பத்திச் செலவு மற்றும் உயர் விலையையும் பொருட்படுத்தாமல் கார்மிச்சேல் நிலக்கரியை எப்படியாவது பெறுவ தற்குதிட்டமிடப்பட்டது. விலை உயர்த்தப்பட்ட தனது மின்சாரத்தை இந்திய மாநில மக்களின் தலையில் கட்டுவதற்கும் அதானியின் திட்டம் இருப்பதைஅதானி ப்ரீப் ஆவணத்தை கவனமாக ஆராயும் எவரும் எளி தாக புரிந்து கொள்ள முடியும்.  தனது அனல் மின் நிலையங்களுக்காக இந்தோ னேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி யின் தரத்தை மிகைப்படுத்தி செயற்கையாக விலை யைக் கூட்டி மிகை செலாவணி நிதியை வெளி நாட்டிற்கு கடத்துவதற்கும் உற்பத்திச் செலவை அதிகமாக்கி மின்சாரத்தின் விலையை உயர்த்திப் பெறுவதற்குரிய தில்லாலங்கடி வேலைகளை அதானி நிறுவனம்செய்ததாக மத்திய வருவாய் புல னாய்வு இயக்குநரகம் குறிப்பாணைகள் அனுப்பியது. (அதானி ப்ரீப் பக்கம் 10 பத்தி 1.1.)  அதானி மின்சாரத்தை தேசிய தொகுப்பில் சேர்க்கும் உயர் மின் அழுத்த பாதைகளுக்கான (அதானி ட்ரான்ஸ்மிசன் லிட்) சாதனங்களை இறக்கு மதி செய்ததில் விலைகளை செயற்கையாக உயர்த்தி  அதிலும் ஊழல் செய்திருந்ததாகவும் இந்த கள்ள  நிதியை பயன்படுத்துவதில் மொரிஷியஸ் நிறுவன மொன்று பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை  மேலும் கூறியது. (அதானி பக்கம் 11 பத்தி 1.2). இந்தியாவின் மிகப்பெரிய அதானியின் முந்த்ரா துறைமுகம் உள்ளிட்ட 10 அதானி துறைமுகங்கள் இவைகளுக்காகவே உருவாக்கப்பட்டன. பயன் படுத்தப்பட்டன. 

கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் கோரமுகம்

புளும்பெர்க் உலக பணக்காரர்கள் அட்டவணை வரிசையின் முதல் ஆறு இடங்களில் உள்ள இந்திய பணக்காரர்களில்  2-லிருந்து 5-வரையுள்ள லட்சுமி மிட்டல், பலோன்ஜி மிஸ்த்ரி, அசிம்பிரேம்ஜி, ஷிவ் நாடார்ஆகியோரது நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்புகள் 1.4.2014லிருந்து (மோடி யுகம்) சென்ற மாதம் 31.1.2018 வரையில் முறையே 19%24% 4% 27% உயர்ந்துள்ளன. இதே காலக்கட்டத்தில்5.27 பில்லியன் டாலராக இருந்த அதானியின் நிகர மொத்த மதிப்பு 28.1.2018-ல் 113 சதவீதம் வளர்ந்து 11.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. மோடி தனது வெளிநாட்டு பயணங்களில் உருவான சர்வதேச அரசியல், வணிகச் சூழலை அதானிக்கு சாதமாக்கித் தந்திருக்கக்கூடும் என்பதற்கு வலுவான காரணங்கள் ஏராளம் உள்ளன. இதற்கு அதானியின் கார்மிச்சேல் திட்டமும் ஒன்றாகும். அதானியின் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய உயர்அழுத்த மின் வலைத் தொகுப்பை இணைக்கும் அதானியின் நீண்ட மின் வழித் தடங்கள், நிலக்கரி உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, அதானியின் இந்திய துறைமுகங்கள் என பல்கிப் பெருகுவதற்கும் இந்தியாவின் அடிப்படை ஒருங்கிணைந்த உள் கட்டமைப்புத் தொழில் களை ஆக்கிரமிப்பதற்கும்மோடி தனது மாநில நட்பின் தனிப்பட்ட நெருக்கத்தில் அதானிக்கு துணை புரிந்தார் என்பது சர்வதேச அரங்கில் ஆஸ்தி ரேலிய போராட்டங்களின் ஊடே அம்பலமானது. அதானியின் அசுர வளர்ச்சி இந்திய அரசியலில் மோடி யின் வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையது.

மோடியின் புகழாரம் 

தில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் 2018ஆம்  ஆண்டு கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது அதானி  மோடியை புகழ்ந்து தள்ளினார். இந்திய பொருளா தாரத்தை நியாயமான வளர்ச்சிப் பொருளாதாரம் என மோசடியாகச் சித்தரித்து நாட்டைச் செல்லரிக்கச் செய்யும் கள்ளப்பொருளாதாரம் எனப்படும் கூட்டுக் களவாணி முதலாளித்துவப் பொருளாதார அரசியல் நட்பிற்கு அதானியையும் மோடியையும் உதாரண மாகக் குறிப்பிடலாம்.

மதச்சார்பற்ற இயக்கங்களின் தலையாய கடமை

2025 இல் 100 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதி நிறுவனமாக மாறவேண்டும் என்பதுதான் அதானி யின் மெகா பகாசுர ஆசை. இதற்கு எந்த வேலை யையும் செய்யலாம் என்பதற்கு ஏராளமான உதார ணங்களை கூற முடியும். உதாரணமாக இனப் படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடு பட்டதாக ஐநா புலனாய்வாளர்களால் குற்றம் சாட்டப் பட்ட மியான்மர் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஹோல்டிங் நிறுவனத்துடன் அதானி குழுமம் 290 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக ஒப்பந்த தில் கையெழுத்திட்டுள்ளது. (கார்டியன் 13.5.2019) இதைத் தான்தனியார் மயபெருநிறுவன பேராசை என குறிப்பிடுகி றோம். அதானியின் இப்பேராசைக்கு மோடினாமிக்சின் பக்கோடா பொருளியல் நிபுணரும் இந்திய டிஜிட்டல் சக்தி மானுமாகிய நரேந்திரமோடி 2002-ஆம் ஆண்டிலிருந்து பேருதவிகள் புரிந்து வந்தார்.  அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய நாட்டின் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பூர்வகுடியினர்

இந்தச் சுரங்கம் நம் நாட்டின் இதயத்தைக் கிழித்து, நம் தளங்க ளையும் இனங்களையும் நிரந்தரமாக அழித்துவிடும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானியின் முக்கிய முதலீட்டாளர்களான அமெரிக்க ஜப்பான் பிரிட்டன்நாடுகளின்ஜேபி மோர்கன், எம்யுஎஃப்ஜி, எச்எஸ்பிசி, பிளாக்ராக் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு நிதியளிப்பதை நிராகரிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளன. இவர்களுடன் டிப்பிங் பாயின்ட் ஆஸ்திரேலியா மற்றும் பேங்க் ட்ராக் அமைப்பு கள் இணைந்து தயாரிக்கப்பட்டஒரு கள ஆய்வு புதை படிவ எரிபொருள் நிதி அறிக்கை 2022-என்பதாகும். இதில் மே 2022 நிலவரப்படி, 55க்கும் மேற்பட்ட நிதி நிறு வனங்கள், அதானி சுரங்கத்திற்கு நேரடியாக நிதிய ளிப்பதை நிராகரித்துள்ளன. மக்கள் எதிர்ப்பால் அதானி மெகா திட்டத்தை 8 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. அதா னியை 26.5 டிரில்லியன் ஆஸ்திரேலிய டாலரின் இருந்து 2 பில்லியன் திட்டமாக குறைக்கச் செய்தது. ஆஸ்திரேலிய மக்களை போலவே அதானி எதிர்ப்பு பிரச் சாரங்கள் இந்தியாவிலும் வலுவாக நடத்தப்படவேண்டும்.