articles

img

நீங்கள் விஷத்தைத் தெளித்தாலும் விழுங்கி எழும் எங்கள் மண்! -சு. வெங்கடேசன் எம்.பி.

பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது  தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்வி க்கு உட்படுத்துவது நமது நோக்க மன்று. விவேகானந்தர் பாறை  உள்ள மண்டபத்தை அரசதி காரத்தைச் சார்ந்த ஒருவர் பயன் படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனை வருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர. 

‘தியானம்’ என்ற செயல் ‘நேர்மை’ என்ற பண்பின் ஈடுபாட் டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாத போது தேர்தல் ஆணையம் ஏன் நம்ப வேண்டும்? தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மை யாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப் பது ஒரேயொரு கேள்வியை மட்டும்தான்.

‘திருடர்களின்’  நிலத்தில் தியானமா? தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒடிசா வில் நடைபெற்ற தேர்தல் பரப்பு ரைக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜெக ந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி. ஆல யத்தின் பொக்கிஷத்தைக் களவா டும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தி னார். இப்பொழுது “திருடர்களின்” நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக் கும். உத்தரப்பிரதேசத்தில் போய்  எங்களை இழித்துப் பேசியதை யும், ஒடிசாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழ ரும் அறிவோம்.  புறம்பேசுபவரிடம் எப்படி நேர்மையை எதிர்பார்ப்போம் எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் “புறம் பேசுதல்”.  நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்றுகூட நாங்கள் கேட்கமாட்டோம்.

எந்த ஒரு மனிதரி டமும் அவரிடம் இல்லாத ஒன்றைச்  கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும். திரு டர்களின் நிலத்துக்குவந்துள்ள உங்களுக்கு ஒடிய மொழி எழுத்தா ளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய “நீலமலை” என்கிற நூலைப் பரிச ளிக்க விழைகிறோம்.

விவேகா னந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள். பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களுக்கு தருகிறோம் நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்ட த்தின் சார்பாக, திருடுபோனதாக நீங்கள் சொன்ன பொருள்பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களி டம் ஒப்படைக்கிறோம். ஆம், இந்த நூல் ஜெகந்நாதர் கோயிலை யும் அதனுடைய பொக்கிஷத்தை யும் பற்றியது. நல்லவருக்குப் பரிசாகவும் தீய வருக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு.

விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள். ஒடிய மைந்தனின்  எழுத்தை வாசியுங்கள் ஒடியாவின் ஒவ்வொரு உயிரி லும் ஜெகந்நாதரின் ஈடுபாட்டுக் கென ஓர் இடம் உண்டு என்பதை  முழுமுற்றாக நம்பும் ஒடியாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தி யின் எழுத்தை வாசியுங்கள். “கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர  அதிபதி யாக, ஒடிய மக்களால் கால மெல்லாம் போற்றப்படும் ஜெகந்நா தரின் பொக்கிஷ அறையின் சாவி, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்ட தாகக் கூறுவது ஆன்மீகமா? அர சியலா? அல்லது அருவருப்பா?” இதற்கும்மேல் பகவான் ஜெகந் நாதர் உங்களின் பக்தர் என்கிறா ர்கள் உங்கள் கட்சிக்காரர்கள்.

தெய்வங்களையே உங்களின் பக்தர் ஆக்கியவர் நீங்கள் இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் “திருடர்”கள் ஆக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர் களாக்கப்பட்டார்கள். இப்பொ ழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின்  உங்கள் விசுவாசிகள் விவேகா னந்தரை என்ன சொல்லப் போகிறா ர்களோ என்ற பதற்றம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.

பகவானே உங்களின் பக்த ராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது? வெறுப்பை கக்கிவிட்டே இங்கு வந்திருக்கிறீர்கள் இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு  எதிர்க்கட்சிகள் கொடுத்துவிடு வார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்பவர்கள், ஊடுருவல்காரர் கள் என்றெல்லாம் பேசிவிட்டுத் தான் தியான மேடைக்கு வந்திருக் கிறீர்கள்.

இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு. ஜெகந்நாதரின் மரியாதை யைக் காக்கும் பொருட்டு சொல்ல வொண்ணா துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல். விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் இந்தியா நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு.

எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு. மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்து முடித்து வந்துள்ள தேர்தல் பரப்புரைகளின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது. நீங்கள் பேசிய எல்லாவற்றி லிருந்தும் தேசத்தைத் திசைத் திருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள்.  

தியாகமும் தியானமும் விளம்ப ரத்தின் பொருட்டு அமையுமே யானால் அச்செயலுக்கு விவே கானந்தர் சூட்டும் பட்டத்தை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. “இது வரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர் நீங்கள்” என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை.

;