லெனின் அவருடைய படைப்புகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் அவரு டைய வாழ்க்கை பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது அவசியம். 54 ஆண்டுகளே வாழ்ந்த ஒரு மனிதர் இந்த உலகத்தில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால், அவர் வாழ்விலே சந்தித்த சோதனை கள் என்ன, எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய இளைஞர் கள் சின்னத் துரும்பையே, பெரிய பாறாங்கல் லாக நினைத்து மனம் நொறுங்கிப் போகிற நிலை யிலிருந்து மாற்றத்தை அடைவார்கள். படைப்பாளிக்கும், படைப்புக்கும் சிறிதுகூட வேறுபாடு இருக்கக்கூடாது என்று லெனின் கூறி னார்.
ஒரு படைப்பு என்பது கொள்கைப்பிடிப்பு, சித்தாந்தம், ஒழுக்கக்கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் படைப்பை விட படைப்பாளி மேன்மை படைத்தவராக இருக்க வேண்டும். அப்படி ஏதாவது வேறுபாடு இருந்தால் அந்தப் படைப்பை புறக்கணிக்க வேண்டும் என்றார். அதுபோல தனது படைப்பை விட மேன்மை பெற்ற மாமனிதராக இந்த உலகம் தவிர்க்க முடியாத நபராக வாழ்ந்தவர் லெனின். ரஷ்யாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற லெனின் செய்த சாதனைகள் ஏராளம். ரஷ்யாவில் எழுத்தறி வின்மையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்.
அனைவருக்கும் கல்வி, தாய்மொழிக் கல்வி, இலவசக் கல்வி, விரும்பும் கல்வி ஆகிய வற்றை நிறைவேற்றினார். தொழிலாளர்கள், விவ சாயிகள் என அனைவரும் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். உலகின் முதல் அறிவொளி இயக்கத்தை ஏற்படுத்தியவர் லெனின். கல்விக் கூடங்களுக்கு சென்று கல்வி கற்க இயலாதவர்களுக்கு வீடு களுக்கே சென்று கல்வி போதிக்கும் நடவடிக் கைகளை மேற்கொண்டார். அதுதான் தற்போ தைய இல்லம் தேடிக் கல்வித் திட்டம். உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்.
புரட்சிகர இயக்கங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியவர். புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது, ஒரு நாட்டில் புரட்சி ஏற்படுவதற்குரிய சூழல் இருந்தால் மட்டுமே புரட்சியை நடத்த முடியும். இல்லாவிட்டால் அந்தப் புரட்சி நீடிக்காது என்று தெளிவுபடுத்தியவர். தன்னெழுச்சியாக நடைபெறும் கிளர்ச்சிகள் எல்லாம் புரட்சி அல்ல. புரட்சியோடு அவற்றைக் குழப்பிக்கொள்ள இய லாது. ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் கிளர்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த லாம் என்றார்.
சிறந்த வாசிப்பாளராக மட்டுமின்றி சிறந்த படைப் பாளியாகவும் திகழ்ந்த லெனின் வாழ்க்கை வர லாற்றை இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். லெனின் சிந்தனை, பொதுவுடைமை இயக்கங்களுக்கான வழிகாட்டல், படைப்புகள் அனைத்தும் 12 தொகுதிகளில் வெளி யிடப்பட்டுள்ளது. அந்த 12 தொகுதிகளையும் இளைஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.