மனிதர்கள் உண்டாக்கும் செயற்கை பிளாஸ் டிக்கைப் போல தேனீக்களும் திரும்ப திரும்ப அடுக்கிய லேக்டோன் எனும் மூலக்கூறுகளை சுரந்து பிளாஸ்டிக்குகளை உண்டாக்குகின்றனவாம். அதில் எஸ்டர் எனும் மூலக்கூறு வடிவம் உள்ளது. இதிலிருந்தே பாலி யெஸ்டர் எனும் பெயர் உண்டாகியுள்ளது.பூமிக்கடியில் தாய் தேனீக்கள் உண்டாக்கும் அறையின் சுவர்களில் இவை பூசப்பட்டு உறுதியும் மென்மையும் கொண்டவையாக ஆக்கப்படுகின்றன. பி.அரிஸோனென்சிஸ் எனும் வகை பெண் தேனீக்கள் குட்டிகளுக்கு தேவையான ஒரு வருட உணவை ஒரு சில வாரங்களில் இந்த அறைகளில் சேமித்து வைத்து விடுகின்றன. புளித்த தேன் மற்றும் மகரந்தங்கள் கலந்த நீர்மத்தில் மிதந்தும் அவற்றை உண்டும் வளர்கின்றன. தேனீக்கள் தாங்கள் சேகரித்த தேனை புளிக்க வைக்க பெரும்பாலும் லேக்டிக் ஆசிட் பேக்டீரி யாக்களையே பயன்படுத்துகின்றன. அவை பீர் போல் வாடை அடித்தாலும் அவை தயிரையே ஒத்திருக்கின்றன. இளம் தேனீக்கள் தங்களது வளர்ச்சியின் தொடக்க காலத்தில் மலம் கழிப்பதில்லை. பெரிதானவுடன் மொத்த மாக கழிக்கின்றனவாம். ஆகவே அவற்றின் குடலிலிருந்து பேக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டு விடுகின்றன. அவற்றிற்கு மாற்றாக பூமிக்கடியிலிருந்து வெளியே வந்த வுடன் எதிர்கொள்ளும் ஏராளமான பேக்டீரியாக்களை பயன்படுத்துகின்றன. அவை தேனீக்களின் குஞ்சுகளுக்கு உணவு தயாரிக்க சேமித்து வைக்கப்படுகின்றனவாம்.