articles

சிரியாவில் பஷார் அல்-அசாத் அரசாங்கம் வீழ்ச்சி!

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் இதர ஆயுதப் பிரிவு களின் விரைவான முன்னேற் றம், சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. இதன்மூலம், மேற்கு ஆசி யாவில் ஆட்சி செய்து வந்த கடைசி மதச் சார்பற்ற அரசாங்கத்தை வீழ்த்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலையீடுகள் காரணமாக, மேற்கு ஆசியா-வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில் ஆட்சி செய்துவந்த  ஆப்கானிஸ்தானம், இராக், லிபியா ஆகியவை முன்பு வீழ்ச்சி அடைந்தன. இப்போது சிரியா வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஃபிராங்கன்ஸ்டைன் மத அடிப்படை வாத/தீவிரவாதக் குழுக்களால் கட்ட விழ்த்துவிடப்பட்ட அழிவு அனைத்து இடங்களிலும் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந் துள்ளன.

2011இல் தொடங்கிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியா மூன்று மண்ட லங்களாகப் பிரிக்கப்பட்டது. அசாத்தின்  அரசாங்கம் 65 விழுக்காடு நிலத்தை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  இது ரஷ்யா மற்றும் ஈரானால் ஆதரிக்கப் பட்டது. இது அரசாங்கத்திற்கு நிலப்பகுதி களைக் கட்டுப்படுத்தவும், தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்களை முறி யடிக்கவும் உதவியது.

மூன்றில் ஒரு பகுதி தீவிரவாதக் குழுக்களிடம்.

சுமார் 25 விழுக்காடு நிலப்பகுதி யுள்ள இரண்டாவது மண்டலம், அமெ ரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்ட சிரியா ஜனநாயகப் படைகளால் (SDF-Syrian Democratic Forces) கட்டுப்படுத்தப் பட்டன. மற்ற பகுதிகள், குறிப்பாக வட மேற்குப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS-Hayat Tahrir al-Sham)- ஆல் கட்டுப்படுத்தப்பட்டன. இது அல்-கொய்தா மற்றும் அல்-நுஸ்ரா முன்ன ணியின் ஒரு பகுதியாகும். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் 2016இல் தன்னை ஒரு சுயேச் சையான தனி நிறுவனம் என்று அறி வித்துக்கொண்டது. இது, இட்லிப்பில் தலைமையகத்தைக் கொண்டு செயல் பட்டது. இது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கியால் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அசாத்துக்கு எதிரான நாடுகளின் இரகசிய ஆதரவை இது பெற்றிருந்தது.  கடந்த ஓராண்டில் இது தன் படைகளை மீண்டும் ஒருங்கிணைத்திடத் தீவிரமாகச் செயல் பட்டு, தாக்குதலைத் தொடங்கியது. அதே சமயத்தில் இதற்கு இணையாக அலெப் போவின் வடக்கில் அமைந்துள்ள  மற் றொரு தீவிரவாதக் குழுவான சிரியன் தேசிய ராணுவம் (SNA-Syrian Nation al Army), இன்னொரு பகுதியிலிருந்து தாக்குதலைத் தொடுத்தது.

சிரியா அரசாங்கத்தின் இரண்டு முக்கிய ஆதரவாளர்களாக விளங்கிய ஈரானும் ரஷ்யாவும் தங்கள் அண்டை நாடு களுடனான மோதல்களால் சிக்கித் தவிக்கின்றன. சிரியா அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய ஹிஸ் புல்லா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதி ரான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த காரணி கள் அனைத்தும் ஏற்கனவே நெருக்கடி யில் இருந்த சிரியா அரசாங்கத்திற்கான ஆதரவைப் பலவீனப்படுத்த வழி வகுத்தது.

மக்களின் அதிருப்தியும் அமெரிக்கா, இஸ்ரேல், அல்கொய்தாவும்

அசாத் ஒரு செல்வாக்கு மிக்க ஜனாதி பதி என்று கூறுவதற்கில்லை. மக்கள்  மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் விதத்தில் அவர் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை நடை முறைப்படுத்தத் தொடங்கினார். இதற்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட் டங்களை நசுக்கிட முயற்சித்தார். மக்கள் அனுபவித்துவந்த அனைத்துவிதமான ஜனநாயக உரிமைகளையும் பறித்து, ஓர் எதேச்சதிகார ஆட்சியைத் திணித் தார். மக்கள் மத்தியில் இருந்த இந்த அதி ருப்தியை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது. அல் கொய்தா மற்றும் அதன் பிராந்தியக் கூட்டாளியான அல்-நுஷ்ரா போன்ற மத அடிப்படைவாத/தீவிரவாத அமைப்புக ளைப் பயன்படுத்தி, உள்நாட்டுப் போ ருக்கு வழிவகுத்த, தீவிரவாதத் தாக்கு தல்களைத் தொடுத்தது. இப்பகுதியில் ஒரு முக்கிய ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடாக விளங்கும் இஸ்ரேலும் இங்கே குழப்பங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தது.

இங்கே கடந்த பத்தாண்டுகளாக நடை பெற்றுவந்த உள்நாட்டுப் போரில் ஆயி ரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் உற்றார்கள். 60 லட்சத்திற் கும் அதிகமானவர்கள் அகதிகளாக மாறி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அழிவின் காரண மாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு பல பில்லியன்களைத் தாண்டும். இவற்றின் காரணமாக சிரியா அரசாங்கத்தால், மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண முடியவில்லை.

முக்கிய பலவீனம்

கடந்த ஓராண்டில், ஹிஸ்புல்லாவுக்கு ஆயுத விநியோகத்தை குறைத்து அதன் அச்சுறுத்தலை நீக்குவது என்ற பெயரில், சிரியாவிற்குள் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி வந்தது. இத்தகைய தாக்குதல்களை சிரியாவால் எதிர்க்கவோ அல்லது எதிர்கொள்ளவோ முடியவில்லை. பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாகி இருந்த சிரியா ஆயுதப்படைகளில் உள்ள வீரர் கள் அவற்றை எதிர்க்கத் தயாராக இல்லை.

சிரியா அரசாங்கத்தின் எதேச்சதிகார குணத்தின் விளைவாக அது மக்க ளின் மத்தியில் நம்பிக்கையை இழந்தி ருந்தது. இதுவே அதன் முக்கிய பல வீனமாகும். இதன் காரணமாகத்தான் தீவிரவாதக்குழுக்கள் தங்கள் தாக்கு தல்களைத் தொடுத்தபோது, சிரியா ராணுவத்தில் எஞ்சியிருந்தவர்களும் எவ்விதமான எதிர்ப்பையும் காட்டாது, கரைந்து போயினர். ஜனாதிபதி அசாத்தும் நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அசாத் வீழ்ந்த உடனேயே, இஸ்ரேல் சிரியா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி யது. டிசம்பர் 10-11க்கு இடையில், 48 மணி  நேரத்தில் இஸ்ரேல் 480 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது கடந்த ஓராண்டில் நடத்தியதைவிட அதிக மாகும். சிரியாவின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தீவிரவாதக் குழுக்க ளின் கைகளில் சிக்கக்கூடாது என்பது தான் தங்கள் தாக்குதலின் தீவிரம் என்று இஸ்ரேல் கூறிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் இன்னொரு வெட்கக்கேடான செயல்

இஸ்ரேல், கோலன் குன்றுகளுக்கு அருகில் சிரியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உள்ள பகுதியை ஆக்கிர மித்திருக்கிறது. தங்கள் படைகள், சிரியாவின் தடுப்பு மண்டலத்தைத் தாண்டிவிட்டது என்று இஸ்ரேல் அதிகாரப் பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. இது ஐ.நா.தீர்மானங்களை இஸ்ரேல் மீறியுள்ள மற்றுமொரு வெட்கக்கேடான செயலாகும். அதிதீவிர வலதுசாரி சியோனிஸ்டுகள், ‘கிரேட்டர் இஸ்ரேலை’ (‘Greater Israel’) உருவாக்குவதற்காக இயன்ற அளவு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.

மறுபக்கத்தில், துருக்கியும் தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக்கொள்வ தில் ஆர்வமாக உள்ளது. இதற்காக அது,  குர்துகள் மீது தாக்குதல்கள் நடத்தவும், அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க வும், சிரியா தேசிய ராணுவத்துக்கு ஆதர வளித்தது. குர்துகள் சுயேச்சையான குர்திஸ்தான் கோரி நடத்திவரும் போரா ட்டத்தை நசுக்கிட அது விரும்புகிறது. துருக்கி ஆதரவு படையினருக்கும் குர்திஸ் படையினருக்கும் இடையே நடை பெற்ற போராட்டத்தில் மூன்றே நாட்களில் இருநூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக் கின்றன.

இன்னொரு உள்நாட்டுப் போர் அபாயம்

சன்னிகள், ஷியாக்கள், குர்துகள், அல்வைட்ஸ், ட்ரூஸ் மற்றும் கிறிஸ்த வர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சிரியாவில் வாழ்கின்றனர். வரவிருக்கும் நாட்களில், போட்டியிடும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவ ளிக்கும் சக்திகளின் முரண்பட்ட நலன் கள் காரணமாக, மதக்கலவரம் கண்டிப்பாக அதிகரிக்கும். ஆதலால் நிலைமைகள் மற்றொரு உள்நாட்டுப் போராக மோசமடைவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இது அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக நம்பிக்கையுடன் இருக்கும் சிரியா மக்களுக்குத் தீங்கு விளைவித்திடும்.

முகமது அல்-பஷீரைப் பிரதமராகக் கொண்டு 2025 மார்ச் 1 வரையிலும் ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதா கத் தீவிரவாதக் குழுக்கள் அறிவித்தி ருக்கின்றன. முகமது அல் பஷீர், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், நல்லாட்சி அமைப்பதாகவும் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) போன்ற  தீவிரவாதக் குழுக்களால் நிர்வ கிக்கப்படும் நாடுகளில் பெற்ற அனுப வங்களிலிருந்து அவர்கள் தங்கள் வாக்கு றுதிகளின் அடிப்படையில் ஆட்சி செய் வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

சிரியாவின் எதிர்காலம் சிரியா மக்க ளால் தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த வொரு வெளிநாட்டின் செல்வாக்கோ அல்லது அச்சுறுத்தலோ அதற்கு ஏற்படக் கூடாது.  ஏகாதிபத்தியமும், சியோனி சமும் தங்கள் அதிகார ஆசைகளைத் தொடர்வதற்கான ஒரு நாடக அரங்க மாகப் பயன்படுத்திக்கொள்ள சிரியாவை அனுமதிக்கக் கூடாது.

டிசம்பர் 11, 2024, 
தமிழில் : ச.வீரமணி