articles

img

பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்! செங்கொடியை ஏற்றிடுவோம்!! - கே.பி.பெருமாள்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏ.ஐ.கே.எஸ்) 35வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் 2022 டிசம்பர் 13 முதல் 16 வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டின் நோக்கங்களை நாடு முழுவதும் விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நவம்பர் 15ம் நாள் இந்தியா முழுவதும் கிராமங்களில், வீடுகளில் விவசாயிகள் சங்க செங்கொடியை ஏற்றிட வேண்டும்; அடுத்து வெண்மணி தியாகிகள், சேலம் சிறைத்தியாகிகள், தெலுங்கானா தியாகிகள் ஜோதி பயணம் தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கேரள மாநிலம் திருச்சூரை சென்றடைவது; இந்தியா முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 15 அன்று ஏன் வீடுகளில் செங்கொடி ஏற்றப்படுகிறது என்றால் அன்று தான் பழங்குடி மக்களின் நாயகனான பிர்சா முண்டாவின் பிறந்த தினமாகும். 

பிர்சா முண்டாவின்  எழுச்சி வரலாறு

1875ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் அமைந்திரு க்கும் உலிகாட் என்ற பகுதியில் சுகணா முண்டா மற்றும் கர்மிஹத்து தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர் பிர்சா முண்டா.  1890ம் ஆண்டு இந்தியாவில் நிலவிய பெரும் பஞ்சத்தின் போது பழங்குடியின மக்களின் பயிரிடும் உரிமைக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு பிரிட்டிஷ் இந்திய அரசு உத்தரவிட்டது. பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் இப்படி வரி வசூல் செய்வது மனிதத்தன்மைக்கு எதிரா னது என்று பழங்குடி மக்களைத் திரட்டிப் போராடி னார் பிர்சா முண்டா. பழங்குடியின மக்களுக்காக அவர் அம்மக்களை ஒன்றுதிரட்டி கொரில்லாத் தாக்கு தல் முறையில் அடர்ந்த காடுகளிலும் மலையிடுக்கு களிலும் அவர் நடத்திய போராட்டத்தின் அதிர்வுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது. 

ஜமீன்தார்கள், உயர்சாதி நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள் துணையுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு அநியாயமான வரிவிதித்ததோடு மெல்ல மெல்ல அவற்றை அபகரிக்கவும் செய்தனர். கூடவே  வனச் சட்டம் எனும் பெயரில் 1895ம் ஆண்டு “காடு களின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசாங்க த்திற்கே சொந்தம்” எனும் சிறப்புச் சட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர்.  அச்சட்டத்தை எதிர்த்து “உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்” என்ற பிர்சா முண்டாவின் குரல் அப்போது இந்திய சமூகத்திற்கே ஒரு புதிய முழக்கமாக இருந்தது. நிலம் உழுபவனுக்கு எப்படி சொந்தமாக இருக்க வேண்டுமோ அப்படி இந்த நாடும் நம்மால் மட்டுமே ஆட்சி செய்யப்பட வேண்டும் என்ற முழக்கத்தையும் பிர்சா முண்டா முன்னெடுத்தார். “இங்கிலாந்து அரசியின் ஆட்சி மாண்டு நமது அரசாங்கம் உதித்தெழட்டும்” என்ற  அவருடைய இன்னொரு முழக்கமும் ஆட்சியாளர் களை ஆத்திரமூட்டியது. சோட்டா நாக்பூர் பகுதிகளில் மக்களை ஒன்று திரட்டி நிலவரித் தொகையை தள்ளு படி செய்யுமாறும் குத்தகை விவசாயிகள் குத்தகை கொடுக்க வேண்டாம் என்றும் போராட்டம் நடத்தி னார். இதுவே பழங்குடி மக்களுக்காக இந்தியா விலேயே நடந்த முதல் போராட்டமாகும். 

“ஒரு குரலைவிட ஒட்டுமொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்” என முழங்கினார் அவர். நில உடமையாளர்களையும், ஆட்சியாளர்களையும் பிர்சா முண்டாவின் இந்த முழக்கங்கள் ஒரே நேரத்தில் பீதியடையச் செய்தது. குரலற்றவர்களாய், அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான ஓர் இனத்தி லிருந்து ஒருவன் குரல் எழுப்புகிறான்; ஓர் இனம் போராட எழுந்து நின்றது. அதற்கும் மேலாக அவர்களின் நோக்கமும் முழக்கமும் இதுவரை ஆட்சி யாளர்கள் கேட்டிராதது. எனவே தான், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கோபம் கொப்பளித்தது.  1899ம் ஆண்டு ஆங்கிலேய அரசுப் படையை எதிர்த்து கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தை பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. ஆங்கிலேய அரசுப்படையை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக பிர்சா முண்டா 1900ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே  ஆண்டு ஜுன் 9ம் தேதியன்று ராஞ்சி சிறையிலேயே இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. பிர்சா முண்டா இறந்த எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டா நாக்பூர் சட்டம் 1908ல் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இச்சட்டம் உறுதி செய்தது. 

நினைவுச் சின்னம்

நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் காந்தி, அம்பேத்கர், நேரு, படேல், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் என நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களும், சிலைகளும் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுச் சின்னங்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அந்த பழங்குடிப் போராளி பிர்சா முண்டா ஆவார். ராஞ்சி விமான நிலையத்திற்கு பிர்சா முண்டா பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் குஜராத்  மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கல்லூரிகளுக்கு பிர்சா முண்டா பெயர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. கடந்த 2021ம்  ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பிர்சா முண்டா  பிறந்ததினத்தை கொண்டாட முடிவு செய்தது. பழங்குடி மக்களிடம் ஊடுருவ பிர்சா முண்டா பிறந்த  தினத்தை மதவெறியர்கள் தற்போது கையிலெடுத்துள் ளனர். இதனை முறியடிக்க வேண்டும். பிர்சா முண்டா  உழைப்பாளர்களின் தலைவன், மலைவாசிகளின் தந்தை. எனவே, அவரின் வரலாற்றை நாம் இந்நாட்டு மக்களிடம் கொண்டு செல்வோம். 

பிர்சா முண்டா பிறந்த தினமான நவம்பர் 15 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35வது  மாநாட்டையொட்டி நாடு முழுவதும் கிராமங்களி லும், வீடுகளிலும் செங்கொடியை ஏற்றி பிர்சா முண்டாவின் வரலாற்றையும், அவரது போராட்ட குணங்களையும் கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், வீடுகளி லும் செங்கொடி ஏற்றிட வேண்டும். 

பிர்சா முண்டா புகழைப் போற்றுவோம்! விடிவை  ஏற்படுத்த செங்கொடியை ஏற்றிடுவோம்!

கட்டுரையாளர் : மாநில பொருளாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்