articles

img

வெறுப்பு அரசியலை வீழ்த்த விரிவான ஒற்றுமையை கட்டுவோம்! - கே.ஜி.பாஸ்கரன்

இந்துத்துவா விதைக்கப்படும் மண்ணிலும் தீமையின் பூக்களே முளைக்கும். பெண்கள் மீதும், பட்டியலின மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பதின் மூலாதாரம் இந்துத்துவா கருத்தியல் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போரின் போது, நாஜிகளால் பல லட்சம் யூத மக்கள் கொல்லப்பட்டனர். அதன்  சர்வதேச நினைவு தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான நியூயார்க்கில் ஜனவரி 27 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த  நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செய லாளர் அண்டோனியோ குட்டரெஸ் நிகழ்த்திய உரை  மிக மிக கவனிக்கத்தக்க ஒன்றாகும்.  பல லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட அந்த பயங்கர மான வரலாற்றை நினைவூட்டிய அவர், இன்றைய சமகால உலக யதார்த்தம் குறித்து தனது ஆழ்ந்த கவ லைகளை வெளிப்படுத்தினார்.   “அபாயம் எனும் எச்சரிக்கை  மணியோசை 1933ல் ஒலித்த போது பலரும் அதை கண்டுகொள்ளவில்லை; சிலரோ அது குறித்து பேசவே தயங்கினார்கள்.  அதே போல் இன்றும் மத மற்றும் இனவெறி, வெறுக்கத்தக்க பேச்சு, பொய்யான தகவல்களை பரப்புதல் ஆகியவை நீடித்து வருவ தாக” அவர் எச்சரிக்கை செய்தார். மனித உரிமை களை புறக்கணிப்பது, சட்டங்களை அவமதிப்பது, இன மேலாதிக்கம், நவீன நாஜி சித்தாந்தத்தின் தீவிரம் மற்றும் மதவெறி, வெறுப்பு ஆகியவை அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். '

குட்டரெஸ் மேலும் கூறுகிறார்: “இந்த நாள் நாஜிக்க ளின் வதை முகாம்களை சோவியத் படைகள் விடு வித்த நாளாகும்; இந்த நாள் வதை முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாளாகும்; அந்த சோகமான வரலாற்றை கடந்து ஒரு நூற்றாண் டாகி விட்டது. ஆனால் வெறுப்பும், தவறான கருத்துக்க ளும் புதிய வடிவங்களை எடுத்து உலகின் அமைதி யையும், சமாதான சக வாழ்வையும் புதிய புதிய வழி களில் அச்சுறுத்துகின்றன”.  கால்களின் அடியில் உறைபனி  இருக்குமானால், திடமான பனிக்கட்டி வெகு தொலைவில் இல்லை என எதிர்காலம் குறித்த ஆழ்ந்த கவலையை வெளிப் படுத்துகிறார். சீர்குலைக்கும் வெறுப்பு பேச்சுக்களை பரவ அனுமதித்தால் மனித சமுதாயம் மிக விரை வில் மிக வேதனையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மீண்டும் அவர் எச்சரிக்கிறார்.

இந்தியாவுக்கும் பொருந்தும்

இந்த தலைப்பு குறித்து பேசும் போது அமெரிக்கா  குறித்து எவராலும் நினைக்காமல் இருக்க முடியாது  என்கிறார் குட்டரெஸ். ஏனெனில் அபாயத்தின் எச்ச ரிக்கை மணி ஓங்கி ஒலிப்பது இப்போது வாஷிங்டனில் தான். இது அமெரிக்கா மீதான வெறுப்பினால் சொல்வது அல்ல. மாறாக,  அவர்கள் இதைப்பற்றி எந்த புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் இருப்ப தால் தான் என்கிறார் குட்டரெஸ்.  இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்று வெள்ளை  மாளிகையில் ஜோபைடன் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போது, ஆசிய அமெரிக்கர்கள் மீது துப்பாக்கி யால் சுட்ட இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஆசி யர்களுக்கு எதிரான வெறுப்பும், குற்றங்களும் அதி கரித்து இருப்பதை ஜோபைடனும் ஒப்புக் கொண்டுள்ளார்.  குட்டரெஸின் கருத்துகள் அமெரிக்காவிற்கு மட்டு மல்ல, இந்திய அரசியல் சூழலுக்கும் அப்பட்டமாக பொருந்துகின்றன. குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வெறுப்பு பேச்சுக்களே மையப் பொருளாக இருந்தன. “அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக” உள்துறை அமைச்சர் அமித்ஷா முஸ்லிம் மக்களை மிரட்டும் தொனியில் பேசினார். 2002ல் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலையே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார். கோத்ரா சம்பவம் நடக்க வில்லை எனினும் குஜராத் வன்முறை நடந்திருக்கும்; அது மிகவும் திட்டமிடப்பட்ட வன்முறை என்றே பிபிசி சமீபத்தில் வெளியிட்ட ஆவணப்படம் நிரூபணம் செய்கிறது.  இரு சமூகங்களுக்கிடையே மோதலை உரு வாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது.  ஆனால் தேர்தல் ஆணையம் அமித்ஷா பேச்சில் எந்த தவறும் இல்லை என புகாரை நிராகரித்து விட்டது. தில்லி வன்முறையிலும் ஒன்றிய அமைச்சரே இஸ்லா மியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை உமிழ்ந்தார்.

சீன அச்சுறுத்தல் கோட்பாடு 

குட்டரெஸ் மேலும் கூறுகிறார்: “இரண்டு மிகவும் அடிப்படையான முடிவுகளுக்கு எளிதாக வர முடியும். முதலாவதாக, வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு மன நிலையின் காரணமாக, அமெரிக்கா மிகத் தீவிர மான வெறுக்கத்தக்க நிகழ்வுகள் நடக்கும் நாடாக மாறியுள்ளது. இரண்டாவதாக, இந்த வெறுப்பின் இலக்கு யூதர்கள் என்பதில் இருந்து ஆசியர்கள் என மாறியுள்ளது. இந்த மாற்றம், பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட ‘சீன அச்சுறுத்தல்’ கோட்பாட்டின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும்”.  குட்டரெஸ் கூறும் ‘சீன அச்சுறுத்தல் கோட்பாடு’ என்பது, சீனா குறித்து ஏகாதிபத்தியம் உருவாக்கி கட்டவிழ்த்து விட்டிருக்கும் சோசலிசத்திற்கு எதிரான சித்தாந்த கருத்தியலாகும். 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை அமெரிக்கா முழு வதும் ஆசியர்களுக்கு எதிராக 12, 000 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2022ல் ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 177 சதவிகிதம் அதி கரித்துள்ளது எனும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சி யூட்டுகின்றன.  இந்தியாவிலும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன.  2010 முதல் 2017 வரை  124 இஸ்லாமியர்கள் பசுவின் பெயரால் தாக்குதலுக்கு உள்ளாகி, 24 பேர் கொல்லப்பட்டனர். இதில் 52 சதம் நிகழ்வுகள் வதந்தியால் நிகழ்ந்தவை. இச் சம்பவங்களில் 97 சதம் 2014க்குப் பின் நிகழ்ந் தவை. பாஜக அதிகாரத்திற்கு வந்த பின் வன்முறை கள் சட்டப்பூர்வமாகி உள்ளன. பல மாநிலங்களில் காவி குண்டர் படைகள் செயல்படுகின்றன.  தில்லி  வன்முறையில் 53 இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர்.  

அரசே நடத்தும் வன்முறை 

அமெரிக்காவில் அரசு வெறுப்புக் குற்றங்களுக்கு துணை போகவில்லை எனினும், நிர்வாகத்தால் அதனை தடுக்க இயலவில்லை என்கிறார் குட்டரெஸ். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக உள்ளது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நோக்கமாக கொண்ட வகுப்புவாத, எதேச்சதிகார அரசு அதிகாரத்தில் உள்ளது. பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கிறது; குற்றவாளிகளை கொண்டாடுகிறது. குஜராத், தில்லி, பீமாகோரேகான் வழக்குகளில் சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2015 முதல் 2020 வரை 356 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 வயது திஷா ரவி உள்ளிட்டு  548 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 800 தேச துரோக வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், 13,000 பேர் சிறையில் இருப்பதாகவும் வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மோடி பதவிக்கு வந்த பின், அவரையும், அரசையும் விமர்சித்த காரணத்திற்காக 405 பேர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  

தீமையின் பூக்கள்

“இனவெறி, வெறுப்பு பேச்சு, துப்பாக்கி வன்முறை ஆகியவை அமெரிக்காவின் புரையோடிப்போன நோய்களாகும். இந்தப் பிரச்சனை தீவிரமடைந்ததற்கு வாஷிங்டனின் அரசியல் அணுகுமுறையும் முக்கிய காரணமாகும். இது மட்டுமில்லாமல், சீனாவிற்கு எதி ரான கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டு வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக சீன அச்சுறுத்தல் கோட்பாடு உலக அளவிலான கருவியாக மிகைப் படுத்தப்பட்டு வருகிறது.  வெறுப்பு என்பது தண்ணீ ரும், உரமும் இட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த  மண்ணில் இருந்து தீமையின் பூக்களைத் தவிர வேறு எதனையும் எதிர்பார்க்க முடியுமா” என குட்ட ரெஸ் கேள்வி எழுப்புகிறார். அதே போன்று இந்தியா விலும் ஆர்எஸ்எஸ் முன் வைக்கும் இந்துத்துவா என்பது வர்ணாசிரம கோட்பாட்டைத் தவிர வேறொன்று மில்லை. இந்துத்துவா விதைக்கப்படும் மண்ணிலும் தீமையின் பூக்களே முளைக்கும். பெண்கள் மீதும், பட்டியலின மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பதின் மூலாதாரம் இந்துத்துவா கருத்தியல் என்பதை புரிந்து கொள்ள முடியும்.   

“சர்வதேச அளவில் அமெரிக்கா நிகழ்த்தும் வெறுப்பு அரசியல் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வராமல், உள்நாட்டில் நிகழும் வெறுப்பு அரசியல் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர  முடியாது. வாஷிங்டன் அரசியல்வாதிகள் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் தொடரும் வெறுப்பு பேச்சுக்க ளாலும், செயல்களாலும் வெறுப்பு அரசியல் குற்றங்க ளை குறைக்க முடியாது. இன்றளவும் அமெரிக்கா, சீனாவின் மதிப்பையும், நோக்கத்தையும் பொய்யான தகவல்களால் அவதூறு செய்து வருகிறது. சீனாவிற்கு எதிரான அரசியலே அவர்களது திசை வழியாக இருக்கிறது. அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய வெறுப்பு புயல் வீசுகிறது.  வெடித்துக் கிளம்பும் ஏவுகணை எதனை குறி வைத்து தாக்கும் என்பதை கட்டுப்படுத்த முடியாது. சூறாவளிகளால் பாதிக்கப்பட்ட பகுதி அமெரிக்கா. அனைத்தையும் அழிக்கும் வெறுப்பு அரசியல் எனும் வன்முறைச் சூறாவளியை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்” குட்டரெஸ். 

இந்தியாவிலும் இத்தகு வெறுப்பு அரசியல் சூறாவளி சுழன்றடிக்கிறது. வரலாறுகளைத் திரித்து, பொய்களை பரப்புகிறது. குஜராத்தில் ஏழாவது முறை யாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. விலைவாசி, வேலையின்மை உள்ளிட்ட வாழ்வாதார பிரச்ச னைகளை பின்னுக்குத் தள்ளி, இந்து வாக்கு வங்கி யை உருவாக்க முடிந்துள்ளது. இது ஒரு அபாயத்தின்  எச்சரிக்கை ஒலி. அதை தடுத்து நிறுத்தவும், வீழ்த்த வும் விரிவான ஒற்றுமையைக் கட்டுவதே வழி!  

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்