தமிழகத்தில் சமீபத்தில் இரண்டு இடங்களில் இரண்டு பெண்கள் மீது அமில வீச்சு நடந்துள்ளது. இரண்டு பெண்களுமே 80 சதவிகித தீக்காயங்க ளோடு உயிருக்குப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இதை செய்தது கோவையில் அப்பெண்ணின் கணவர், விருத்தாச்சலத் தில் பெண்ணின் மாமியார். பொதுவாக தமி ழகத்தில் நடந்த அமில வீச்சு சம்பவங்க ளில், முதன்முறையாக இப்போது அமில வீச்சு என்பது குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக நடந்தேறி இருக்கிறது. இந்த போக்கு மாதர் அமைப்புகளுக்கு கவலை அளிப்பதாக இருக்கின்றன.
நீதிமன்ற வளாகத்திலேயே...
இது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய மகளிர் சட்ட உதவி மன்றம், தமிழ்நாடு (இணைப்பு AIDWA), பிற ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ள டக்கிய இரண்டு குழுக்களை அமைத்து கோவையிலும் விருதாச்சலத்திலும் கள ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கேரளாவில் இருந்து தமிழகத்தில் குடியேறி தனது மாமன் மகனை திருமணம் செய்து 17 வருட தாம்பத்திய வாழ்க்கையை இரண்டு குழந்தைகளுடன் நடத்தி வருப வர். இவருக்கு தாய் தந்தை ஆதரவில்லை. 2017-இல் பாதிக்கப்பட்ட பெண் மீது இரண்டு திருட்டு வழக்குகள் பதியப்பட்டு கோவை நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. வாய்தாவிற்கு கணவன் மனைவி இருவருமே வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்குக் காக, கணவர் வழக்குரைஞரையும் நிய மித்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்திருக்கிறார்.
தன் மீது போடப்பட்ட வழக்கிற்கு கணவர் வைத்த வழக்குரைஞருக்கு பதி லாக புதிய வழக்குரைஞரை நியமித்து விட்டு, 23. 3 . 2023 அன்று தனது வழக்கு அழைக்கப்படுவதற்காக குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 வாயிலில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கணவர் அங்கு வந்து மனைவி தன்னோட வீட்டுக்கு வரவேண்டும் என்று சச்சரவு செய்து இருக்கிறார். மறுத்தபோது தன் கையில் வைத்திருந்த அமிலத்தை பின் கழுத்தில் ஊற்றியுள்ளார். அந்த பெண் பயந்து ஓடிய போது ஒரு லிட்டர் பாட்டிலில் உள்ள மொத்த அமிலத்தையும் வீசி உள்ளார். கணவரின் பெற்றோர் ‘ஊத்துடா அவள் மீது’ என்று தூண்டியிருக்கின்றனர். குற்றவாளி தப்பித்து ஓடிய போது வழக்குரைஞர்களும் பொதுமக்களும் விரட்டிப் பிடித்து விட்டனர். இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை முழுவதும் உருகி ஊற்றி விட்டதால் அவர் நிர்வாண மாக கதறிக் கொண்டே பக்கத்து நீதிமன்றத் திற்குள் நுழைந்து கீழே விழுந்துவிட்டார். பிறர் தொட்டாலே அவர்கள் கைகளும் பொசுங்கிவிடும் என்ற நிலையில் துணிச்ச லாக இரண்டு பெண் வழக்குரைஞர்க ளும், ஒரு இளம் ஆண் வழக்குரைஞரும் ஓடி வந்து பெண்ணின் மீது தங்களது வழக் குரைஞர் கோட்டை போர்த்தியுள்ளனர் அதுவும் உருகி விட்டது.
சலனமின்றி நடந்த நீதிமன்ற பணிகள்
சம்பவத்திற்கு பிறகு அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஆம்பு லன்ஸும் வரவில்லை. காவல்துறையும் வரவில்லை. அங்கு வேறு வழக்குக்காக நின்றிருந்த காவலர்களோ நீதித்துறை சார்ந்த அலுவலர்களோ ஏன் அங்கு நீதி பரிபாலனம் செய்து கொண்டிருந்த நீதி பதிகளோ உதவிக்கு வரவில்லை. இதி லேயே அரை மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆகிவிட்டது. பின்னர் பிற வழக்குரைஞர்கள் உதவி யோடு டாக்ஸி மூலம் இரு பெண் வழக்குரை ஞர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்து விட்டு அவர் உயிர் போகும் நிலையில் இருப்பதால் எந்த சிகிச்சையும் பலனளிக் காது என்று தங்கள் ஆம்புலன்ஸிலேற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார் கள். இங்கு 20 நிமிடம் காலதாமதம் ஆனது. அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் அந்தப் பெண் அணிந்தி ருந்த நகைகளை யாராவது பெற்றுக் கொண்டால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். வேறு வழியின்றி அந்தப் பெண் வழக்குரை ஞர்கள் நகையை வாங்கி நீதிமன்றத்தில் தெரிவித்து காவல் நிலையத்தில் ஒப்ப டைத்து இருக்கின்றனர். இவ்வளவு நடந்த பிறகும் எந்த சலனமும் இல்லாமல் நீதி மன்ற பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கப்பட்ட பெண் உட்பட! மகளிர் சட்ட உதவி மன்ற குழு சந்தித்து விவரங்களை சேகரித்தது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர், தன் மீதும் மற்றும் அவர் நண்பர்கள் மீதும் வர வேண் டிய திருட்டுப் பழியை தனது மனைவியின் மீது சுமத்தியுள்ளார் என்பது தெரிய வருகிறது. கணவரின் கொடுமை தாங்காம லும் நடவடிக்கை பிடிக்காமலும் மனைவி விலகி வந்து வேறு வழக்குரைஞரை வைத்து வாதாட நினைத்தபோது எங்கே உண்மை வெளிவந்துவிடுமோ என்று பயந்து அவள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அவளை சிதைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் மீது அமில வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
அரசு கவனிக்க வேண்டியவை
நீதிமன்றத்தில் இது போன்ற சம்பவங்க ளை எதிர்நோக்க என்ன ஏற்பாடு உள்ளது என்ற கேள்வி எழுகிறது. 5000 பேர் வந்து போகும் நீதிமன்றத்தில் ஒரு மருத்துவர் இல்லை. இரண்டாவதாக ஆம்புலன்ஸ் போன்ற வாகன வசதி இல்லை . பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனையில் பார்க்க சென்ற போது ஆண்கள் அறுவை சிகிச்சை வார்டை கடந்து ஆண்கள் தீக்காயப் பிரிவு வார்டு வழியாக பெண்களுக்கான தீக்காயப் பிரிவு வார்டை சென்று சேர வேண்டி இருந்தது. உடல் முழுவதும் தீக்காயங்க ளுடன் அரைகுறை ஆடைகளுடன் அங்கு படுக்கையில் வலியால் துடித்து முணங்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. காற்றோட்டம் இல்லை. தீக்காய வார்டுகளை உருவாக்க, பராம ரிக்க மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் குளிர்சாதன வசதி என்பது அத்தி யாவசியத் தேவையாகிறது. ஆனால் இங்கு மின்விசிறி கூட வேகமாக இயங்க வில்லை. தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக தீக்காயப் பிரிவுகளின் நிலையை மேம்படுத்த வேண்டும். நீதிமன்றங்களில் அவசர உத விக்காக ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி செய்வதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். கண் ணெதிரே வன்முறைக்கு உள்ளான பெண் ணுக்கு உதவ நீதிபதிகள் ஏன் முன்வர வில்லை என்பதை நீதித்துறை விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு முதலுதவி தராமல் திருப்பி அனுப்பிய தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து கேட்டு தொடர் துன்புறுத்தல்
விருத்தாச்சலத்தில் நடந்த சம்ப வத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆண்டாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார். பாதிக்கப்பட்ட பெண் அவரு டைய சொந்த சகோதரரின் மகள். ஆண்டாள் அதிமுக வின் நகர துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர். சம்பவ தினத்தன்று ஆண்டாள் அக்கம் பக்கத்தினர் பார்க்கும் போதே மருமகள் மீது அமிலத்தை ஊற்றியுள்ளார். மீண்டும் அமிலத்தை அந்த பெண்ணின் வாயில் ஊற்றிய போது அருகில் குடி யிருந்த கணவன் மனைவி ஓடி சென்று பூட்டப்பட்ட கதவின் இடுக்கு வழியாக கையை விட்டு அதை தடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். இதில் அவர்க ளுக்கும் கைவிரலில் ஆசிட் காயம் ஏற் பட்டது. அந்தப் பெண்ணின் உடைகள் பின்புறம் முழுவதாக பொசுங்கிவிட்டது ரோந்து போலீசார் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அக்கம் பக்கத்தினர் உத வியுடன் உடைமாற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். அமில வீச்சால் முகம், மார்பு, தொடை என்று உடல் முழு வதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மகளிர் சட்ட உதவி மன்ற குழு அந்த பகுதிக்கு சென்று சாட்சிகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார், கணவர் மற்றும் குடும்பத்தினர் குழுவினரை சூழ்ந்து கொண்டு சண்டை இட்டு உள்ளனர். சம்பவத்தை பற்றி குழுவினரிடம் தகவல் களை பகிர்ந்து கொண்டவர்களை மிரட்டி உள்ளனர். குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் வெளியே சுதந்திரமாக உல விக்கொண்டு சாட்சிகளை கலைத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு வீட்டை அந்த பெண்ணுக்கு கொடுத்தும் தொ டர்ச்சியாக சொத்து கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கிறார் கள். காவல் நிலையத்தில் புகார் செய்தும் ஆண்டாள் தன் பணபலம் ஆள்பலத்தால் அந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி விட்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இரண்டு சம்பவங்களிலும் தலையீடு செய்துள்ளது.
ஆணாதிக்க நியாயப்படுத்தல்
இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப் பட்ட பெண்களின் நடத்தையை குற்றம் சாட்டப்பட்டவர்களும் காவல்துறையும் சமூகமும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கி றது. கோவை சம்பவத்தில் தொடர்ச்சி யாக பாதிக்கப்பட்ட பெண்ணை அவள் கணவர் சேர்ந்து வாழ அழைத்தபோது அவர் மறுத்ததால் ஆசிட் வீச்சு நடை பெற்றது என்றும் பாதிக்கப்பட்ட பெண் மீது திருட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தன என்பதையும் முன்னிலைப் படுத்தி சில ஊடகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்சம் நிவாரணம் வழங்கிய செய்தியில் கூட அவரது நடத்தையை பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. அதேபோல விருத் தாச்சலத்தில் பாதிக்கப்பட்ட பெண் செல்போன் மூலமாக பலருடன் தொடர் பில் இருந்தார் என்றும் அவள் போனில் உள்ள செல்ஃபி புகைப்படங்களை காட்டி யும் மக்களை திசை திருப்பும் பிரச்சா ரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது, குரூர மான முறையில் நடத்தப்பட்ட அமில வீச்சு வன்முறையை, இந்த ஆணாதிக்க சமூ கத்தில் நியாயப்படுத்தும் செயலாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
அமில விற்பனைமுறையும் வீச்சுக்கு தண்டனையும்
லக்ஷ்மி எதிர் இந்திய ஒன்றிய அரசு (vs union of india) ( W.P. No. 129/2006) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் (over the counter முறையில்) அமிலம் விற்கப் படுவதை முற்றிலுமாக தடை செய்து உள்ளது. மேலும் கீழ்க்கண்ட சில நெறி முறைகளை உருவாக்கியுள்ளது: 18 வய துக்கு குறைவானவருக்கு அமிலத்தை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்பவர் யாரிடம் அமிலம் விற்கப் படுகிறது அதன் காரணம் மற்றும் அளவு என்ன என்பதைக் குறித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அமிலம் வாங்குப வரின் அடையாள அட்டையை (அரசால் வழங்கப்பட்டது) பரிசோதிக்க வேண்டும். அமில விற்பனையாளர் வைத்திருக்கும் அமிலங்களின் கையிருப்பை அப்பகுதி யின் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டுக்கு படிவம் மூலமாக தெரிவிக்க வேண்டும். இந்த முறைகளை பின்பற்றாதவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அமிலங்களை பறிமுதல் செய்வதுடன் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். நிர்பயா வழக்கிற்கு பின்னர் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத் தில் (2013) முதல் முறையாக அமில வீச்சுக் கென்று 326 ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது அமில வீச்சுக்கான தண்டனை 10 வருடம் முதல் ஆயுள் காலம் வரை. மேலும் பிரிவு 357 சிஆர்பிசி படி ரூபாய் 3 லட்சம் இடைக் கால நிவாரணமாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழங்க வேண்டும். தண்டனையின் போது குற்றவாளிக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கே வழங்கப்பட வேண்டும். எந்த ஒரு மருத்துவமனையும் (அரசு மற்றும் தனியார்) அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை செய்ய மறுத்தால் தண்டனைக்கு உள்ளாவார்கள்.( Sec. 166B of IPC and sec.357 of Cr.P.C). இலவசமாக முதலு தவி அளித்தவுடன் மருத்துவமனை நிர்வா கம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவசமாக சிறந்த முறை யில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறு திப்படுத்த வேண்டும்.( பிரிவு 357 of crpc).
விரைவாக வழக்கை முடித்தல் சிறந்த சிகிச்சை அளித்தல்
ஒன்றிய அரசின் உள்துறைச் செயலர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்க ளுக்கு 20/4/2015 அன்று அனுப்பிய சுற்ற றிக்கையில் அமில வீச்சால் பாதிக்கப் படும் பெண்களின் வழக்குகளை விரை வாக நடத்தி முடித்து குற்றவாளிக்கு தண் டனை பெற்றுத் தருவது மாநில அரசு களின் கடமை என்றும் அது தான் எதிர் காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்க உதவும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருந்து அமிலத்தை வாங்கி இருக்கி றார் என்பதை கண்டறிந்து அந்தப் பகுதி யில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் அமில விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவா ரணம் வழங்கவும், சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாது காத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமித்து முறையாக நடத்தவும் ஆவன செய்ய வேண்டும்.
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள். பெண்களின் உயிரை எடுப்பதை விட அவர்கள் முகத்தையும் உடலையும் சிதைப்பது என்ற ஆணாதிக்க சிந்தனையின் கோர மான வெளிப்பாடுதான் அமில வீச்சு. அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் உருவம் இழந்து அடையாளத்தை இழந்து வாழ்வாதாரம் இழந்து சமூகத்தின் அரு வருப்புக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்படுகி றார்கள்.அமில வீச்சு என்பது ஒரு மோச மான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல். ஒரு நாகரிக சமுதாயம் அதை எவ்விதத்திலும் நியாயப்படுத்தக் கூடாது, அனுமதிக்கவும் கூடாது என்பதை கோவை நீதிமன்றச் சுவரிலும், தரையிலும் பதிந்த அந்தப் பெண்ணின் ரத்தத்திலும், சதையி லும் தோய்ந்த காலடித் தடங்களும், கை களின் அடையாளமும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.