articles

உழுபவனுக்கே நிலம் என்று முழங்கிய தியாகத்தின் விளைநிலம்

“தோழர் என். சங்கரய்யா, விடு தலைப் போராட்ட காலம் முதல் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.. உழு பவனுக்கு நிலம் சொந்தமாக கிடைக்க வேண் டும் என்பதற்காகவும், நிலச் சீர்திருத்தச் சட்டம் முழுமையாக அமலாக்கம் செய்யப் பட்டு, உபரி நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் வாழ்நாள் முழு வதும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர் கள் இயக்கத்திற்கு வழிகாட்டி பெரும் பங்காற்றியவர்.

குறைந்தபட்ச கூலி, விவசாய தொழிலா ளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். வீடற்ற லட்சோப லட்சம் ஏழைகளுக்கு வீட்டு மனை யும், வீடும் அரசு கொடுப்பதை நடைமுறைப் படுத்துவதற்கு சட்டமன்றத்தில் தொடர்ந்து வலி யுறுத்தியவர்.  கிராமப்புறங்களில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து இன்றளவும் கொடிய நோயாக இருக்கக்கூடிய தீண்டாமை யை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் கலகம் செய்தவர் தோழர் என் சங்கரய்யா. அனைத்து மேடைகளிலும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக கிராமப்புற மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முழங்கியவர்.

கடுமையான விலைவாசி உயர்வின் கார ணமாக அரிசிப் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் ரேசன் விநியோக முறையைப் பலப்படுத்தி அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள் ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைப்பதற்காக சட்டமன்றத்தில் வலியுறுத்தி அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்கச் செய்தவர்.

நிலப்பிரபுத்துவ கொடுமைகள் தீருவதற் காக மாநாடுகள்- போராட்டங்கள் நடத்தி கிரா மப்புற சமூகம் மாற்றம் காணப் பாடுபட்டவர். கலையும் இலக்கியமும் மன்னர்களையும் பெருந்தனக்காரர்களையும் புகழ்ந்து எழுதி குவிக்கப்பட்ட காலத்தில் கிராமத்து உழைப் பாளிகளின் வாழ்க்கை குறித்து கலையோடும் இலக்கியத்தோடும் இணைத்து புதுமையை புகுத்தியவர் தோழர் சங்கரய்யா அவர்கள்.

தேசிய அளவிலும் தமிழ்நாட்டிலும் விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து வழிகாட்டியாக திகழ்ந்தவர். அர சியல் என்றாலே ஊழலும் ஊதாரித்தனமும் பகட்டும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில் நூறாண்டுகளுக்கு மேலாக தூய வாழ்க்கையை வாழ்ந்து இளைய தலை முறையினருக்கு வாழ்க்கைப் பாடமாக அமைந்து, மறைந்திருக்கிற உன்னத தலை வருக்கு செங்கொடி தாழ்த்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் செம்மார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.”

அகில இந்திய துணைத் தலைவர் 
ஏ.லாசர், மாநிலத் தலைவர் 
எம்.சின்னதுரை, 
மாநிலப்  பொதுச்செயலாளர் 
வீ.அமிர்தலிங்கம், 
பொருளாளர் அ.பழநிசாமி, 
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்.