ஒன்றிய-மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்
- ஆன்-லைன் ரம்மி தடை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்-லைன் விளையாட்டுக் களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்-லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்-லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்திற்கான ஆன்-லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், ஆன்-லைன் விளை யாட்டுக்களான ரம்மி, போக்கர் விளை யாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட் டவை தொடர்பாக அரசு விதிகளை உரு வாக்கிக் கொள்ளலாம் என 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, இந்த சட்டத்தின்கீழ் ஆன்- லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த ஆண்டு பிப்ர வரி 14 ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளி யிட்டது. தமிழக அரசின் இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், எக்ஸ்பர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொட ரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜ சேகர் அமர்வில் புதன்கிழமை (மார்ச் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய - மாநில அரசுகள் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப் பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21 ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத் திற்கு தள்ளி வைத்தனர். மேலும் மார்ச் 17 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கப் படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.