world

img

ஹைதி நாட்டின் ஐனதிபதி ஜோவெனல் மாய்சே சுட்டுக்கொலை

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இந்த நாட்டின்  ஐனதிபதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோவெனல் மாய்சே பதவியேற்றார்.  இந்நிலையில், இவர் இன்று போர்ட்டோ பிரின்ஸ் நகரில் உள்ள தனது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பாட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மாட்டின் மோஸ் தற்போது மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். ஐனதிபதி ஜோவெனல் மாய்சே சுட்டுக்கொல்லப்பட்டது மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 

ஹைதி நாட்டில் சமீப காலமாக வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

;