138 ஆவது மே தினத்தன்று உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், தொழிலாளர் விரோத சட்டங்கள், போர், பாலின பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டிடவும் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் சங்கங்களும் ஒன்றிணைந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் மிகப்பிரம்மாண்டமான பேரணிகளை நடத்தின.