tamilnadu

img

மக்களிடம் இன்று மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர்...  

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைபெறுவதற்காக முதலமைச் சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையதளம் வாயிலாகவும் மனுக் கள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில் ஜூலை 12 திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதன் படி திங்கள் காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறியஇருக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

;