districts

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், மே 1 4- ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10,000 மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாரா ட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.  இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் நடப்பு ஆண் டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாத னைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதர வளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்த வர்) ஒரு ஆட்ட நடுவர்-நடுவர்-நீதிபதி ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) வழங் கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் விருது வழங்கு வதற்கு முந்தைய மூன்று வருட செயல்பாடுகள் கணக் கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 இத்திட்டத்தின்படி 2021-2022 ஆம் ஆண்டிற்கான (காலம் 1.4.2018 முதல் 31.3.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ் நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியா வின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.  இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட, தமிழ்நாட் டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ் விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்தி லும் இவ்விருது வழங்கப்படும்.  விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட் டில் பெற்ற சிறந்த வெற்றிகள் இவ்விருதிற்காக கருத்தில்  கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனை கள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப் பத்துடன் இணைத்தல் வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை  ஏற்றுக் கொள்ள வேண்டும். 

விருதுக்கு உரிய விளை யாட்டுப் போட்டிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.  2021-2022 ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2018 முதல் 31.03.2021 வரை  பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப்  போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத் தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும். முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான (www. sdat.tn.gov.in) மூலம் பெற்றுக் கொள்ளலாம்.     விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதல மைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை – 600003 என்ற முகவரிக்கு 10.6.2022-க்குள் அனுப்பி வைத்திட வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

;