tamilnadu

img

மோடிக்கு மக்களிடையே செல்வாக்கு குறைகிறது!

திஸ்பூர்:
பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளுக்கு நாள் மக்களிடையே செல்வாக்கு சரிந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய் கூறியுள்ளார்.மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்வு முடிவுகள் குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கோகோய் பேட்டி அளித்துள்ளார். அதில்தான், “பிரதமர் நரேந்திர மோடிக்குநாட்டு மக்களிடையே செல்வாக்கு குறைந்துவருவதையே இவ்விரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றன” என்று கோகோய் கூறியுள்ளார். மேலும், “பிரதமர் மோடி செல்வாக்கு அதிகரித்து வருவதாக ஒரு பிம்பம் உள்ளது, இனிஅது எடுபடாது. ஒவ்வொரு முறையும் மக்களை உணர்ச்சிவசமாக முட்டாளாக்கும் வேலையை அவரால் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ள கோகோய், “காங்கிரஸ் கட்சியில் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல் பட்டால், எதிர்வரும் தேர்தல்களில், பாஜகவெல்ல முடியாது” என்றும் குறிப்பிட்டுள் ளார்.

;