tamilnadu

img

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்3ல் தூக்கு -தில்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா பலாத்கார வழக்கில்  குற்றவாளிகளை வரும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும்  தண்டனையை உறுதி செய்தது. குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ந்தேதி தூக்கில் போட வேண்டும் என்று கடந்த ஜனவரி 7ந்தேதி தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. முகேஷ்குமார் சிங் கருணை மனுவை கடந்த ஜனவரி 17ந்தேதி ஜனாதிபதி நிராகரித்தார். அதை தொடர்ந்து மீண்டும் தில்லி நீதிமன்றம் 4 பேரையும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கில் போட வேண்டும் என்று 2வது மரண வாரண்டு பிறப்பித்தது.  திகார் ஜெயிலில் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் நடைபெற்றது, கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்களை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.   இதற்கிடையில் குற்றம் நடைபெற்றபோது தான் சிறுவன் என்பதால் தன்னை தூக்கில்போட தடை விதிக்க வேண்டும் என்று பவன்குப்தா தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 
 

;