districts

img

செங்குளம் காலனியில் அடிப்படை வசதிகள் கோரி வாலிபர், மாதர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.16- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு செங்  குளம் காலனியில் குடிசை  மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு 650-க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவை யான தண்ணீரை போர்வெல் மூலம் நீர்தொட்டிகளுக்கு ஏற்றி பொதுமக்களுக்கு  வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்குவ தில்லை. தண்ணீரை மக்கள் கீழிலிருந்து எடுத்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடி நீரும் தினமும் வழங்கப்படு வதில்லை. வாரத்திற்கு ஒரு முறைதான் வழங்கப்படு கிறது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மற் றும் குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளிடம் கடந்த 2  ஆண்டுகளில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இதனை  கண்டித்தும், பல ஆண்டு களாக நீடித்து வரும் தண்  ணீர் பிரச்சனைக்கு தீர்வு  காண வேண்டும். செங்குளம் காலனி முழுவதும் தேங்கி உள்ள மழைநீர், பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பை கள் ஆகியவற்றை அகற்றி சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கை சீர மைக்க வேண்டும். தெரு நாய்  களை கட்டுப்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று அரியமங்கலம் கோட்ட அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாதர் சங்க பகுதி தலைவர் சாந்தா, வாலிபர் சங்க கிளை தலை வர் சூர்யா ஆகியோர் தலை மை வகித்தனர். போராட் டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாவட்டச் செய லாளர் சேதுபதி, பகுதி தலை வர் ஷாஜகான், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ரேணுகா, மாவட்ட தலைவர் பொன்மகள், மாவட்ட செய லாளர் சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் ராஹிலாபானு ஆகியோர் பேசினர்.

;