tamilnadu

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் மாநில மாநாடு: நிர்வாகிகள் தேர்வு

மதுரை, ஏப்.8-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறைஅனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின்முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. ஏப்ரல் 5 வெள்ளியன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சனிக்கிழமையன்று பொது மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர் நா.முனியாண்டி சாமிதலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழு செயலாளர் என்.ஜெயச்சந்திரன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.வி.மூர்த்தி செயல் அறிக்கையை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு முன்னாள் அரசு செயலாளர்முனைவர். கி.தனவேல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் என்.எல்.ஸ்ரீதரன், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்ரமணியன், உள்ளாட்சி தணிக்கை ஓய்வு பெற்ற அலுவலர் நலசங்கம் எஸ்.சந்திரசேகரன், ஊரக வளர்ச்சித் துறை மாநில அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.கென்னடி பூபாலராயன், வரவேற்பு குழுத் தலைவர் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் மு.பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக் குழுச் செயலாளர் ச.கோமதிநாயகம் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

மாநில தலைவராக எஸ்.ராமமூர்த்தி, மாநில பொதுச் செயலாளராக பா.ரவி,மாநிலப் பொருளாளராக மு.மகாலிங்கம், மாநிலத் துணைத் தலைவர்களாக நா.முனியாண்டி சாமி, ஆர்.சுப்ரமணியன், பி.எல்.துரை, ஆ.சுந்தரமூர்த்தி நாயனார், ஆர்.நடராஜன், ஏ.பி.முருகேசன், என்.ராஜ்மோகன். மாநிலச் செயலாளர்களாக டி.எஸ்.வி.மூர்த்தி, ஏ.ஜான்செல்வராஜ், வி.இ.யுவராஜ், ராஜகோபால், வி,நாகராஜன், ச.கோமதிநாயகம் சுப்ரமணியம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

;