tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது...

லண்டன் 
உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பரவி வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகள் இன்னும் ஊரடங்கைத் தளர்த்தாமல் மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது. இதுவரை 45 லட்சத்து 43 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 14.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 317 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 86,912 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டனில் 33 ஆயிரம் பேரும், இத்தாலியில் 31 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் செய்தியாக 17 லட்சத்து 13 ஆயிரம் கொரோனவாவை வென்று இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.    

;