tamilnadu

img

பெரோஸ்கானுக்கு ஆதரவாக பேரணி... ஏபிவிபி-க்கு மாணவர் சமூகம் பதிலடி

வாரணாசி:
வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில், டாக்டர் பெரோஸ்கான் சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த 20 பேர் யாகம் நடத்தியும், பூஜை செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முஸ்லிமான பெரோஸ்கானிடம், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி இந்த விஷமத்தை அரங்கேற்றி வருகின்றனர்.“வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் கற்பிக்க வேண்டுமென்றால் நான் ஒருஇந்துவாக இருக்க வேண்டும் என்றுஎதிர்பார்க்கலாம். ஆனால் நான் அபிக்யான்சகுந்தலம், உத்தர ராம்சரித்திரம், மகாகாவியம், ரகுவன்ஷ் மகா காவியம், ஹர்ஷ் சரித்திரம் போன்ற சமஸ்கிருத இலக்கியம் மட்டுமே கற்றுத் தர வந்துள்ளேன்; இதில் மதம் எங்கேவந்தது?” என்று பெரோஸ் கான் கூறியதைஅவர்கள் ஏற்கவில்லை.இந்நிலையில் பெரோஸ்கானுக்கு ஆதரவாகவும், கல்வித்துறையில் மதத்தைப் புகுத்தும் ஆர்எஸ்எஸ் கும்பலின் நடவடிக்கையைக் கண்டித்தும், வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்,நூற்றுக்கணக்கில் திரண்டு, லங்கா நுழைவில் இருந்து ரவிதாஸ் நுழைவு வரை பேரணி நடத்தியுள்ளனர்.“டாக்டர் பெரோஸ்கானுக்கு எதிராக போராடுவோரிடம் சாதியப்பற்றுதான் தெரிகிறது; அந்த 20 மாணவர்களின் கருத்து இந்தபல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கருத்து அல்ல; பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருமே பெரோஸ்கானுக்கு எதிராக இருப் பது போல தோற்றத்தை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்; ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாங்கள், டாக்டர் பெரோஸ்கானை, பண்டிதர் மதன் மோகன்மாளவியா உருவாக்கிய இந்துப் பல்கலைக்கழகத்திற்கு மகிழ்ச்சியோடு வரவேற்கின் றோம்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

;