tamilnadu

img

காங்கிரஸ் தலைவர்களை மக்கள் ஷூ-வால் அடிப்பார்கள்!

ஸ்ரீநகர்:
சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை, மக்கள் ஷூவைக் கொண்டு அடிப்பார்கள் என்று ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை, அம்மாநில பாஜக தலைவராக நியமித்து விடலாம் என்று காங்கிரஸ் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரிலேயே, இவ்வாறு இழிவான முறையில் சத்யபால் பேசியுள்ளார்.ஜம்முவில் சத்யபால் மாலிக் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அப்போது, “ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில் இதுவரை காங்கிரஸ் எந்தவித தெளிவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை” என்று குற்றம் சாட்டியதுடன், “ஒருவேளை காங்கிரசார், ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வாக்கு கேட்டு வரும்போது, சட்டப்பிரிவு 370 நீக்கத்தை எதிர்த்துப் பேசினால், மக்கள் அவர்களை அருகில் அழைத்து ஷூவால் அடிப்பார்கள்” என்று சத்யபால் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலில் ஒரு குழந்தை போல் நடந்து கொள்கிறார்” என்றும் “ஒரு மரியாதையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், அவரைப்பற்றி நான் மேலும் பேச விரும்பவில்லை” என கடுமையாக சாடியுள்ளார்.

;