tamilnadu

img

காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை....

சென்னை:
காந்தியின் 74ஆவது நினைவு நாளை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு நாளையொட்டி சனிக்கிழமையன்று (ஜன.30) சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மகாத்மா காந்தியின் சிலை முன்பு தியாகிகள் சங்கம் சார்பில் “காந்தியின் புகழ்பாடு வண்ணம்” பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கண்டு ரசித்தனர்.

;