tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்பு

புதுதில்லி:
கொரோனா வைரஸ் நோயை பரிசோதனை செய்யும் கருவி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித் துள்ளது.

புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரிசொல்யூஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ள பரிசோதனை கருவியின் மதிப்பு80 ஆயிரம் ரூபாய் என்றும், ஒரு கருவியின் மூலம் 100 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைக்கு ஆகும் நேரத்தை விட பாதியளவு நேரத்திலேயே புதிய கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட கால்பங்குவிலை கொண்ட இந்த கருவியை, அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்  ஒரு வாரத்திற்குள் 1 லட்சம் முதல் ஒன்றரைலட்சம் கருவிகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

;