tamilnadu

img

5 இந்திய மாலுமிகள் கடத்தல் உண்மை: மத்திய அமைச்சர்

புதுதில்லி:

நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் 5 இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டது உண்மைதான் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் கடந்த மாதம் எம்டி அபேகஸ் என்ற கப்பலில் இருந்த 5 இந்திய மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக, மாலுமிகளில் ஒருவரின் மனைவி அளித்த தகவலின் அடிப்படையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நைஜீரிய தூதரை தொடர்பு கொண்டு சுஷ்மா செய்தியை உறுதி செய்தார். நைஜீரியாவில் உள்ள இந்திய தூதர் அபே தாக்கூரிடம் இது குறித்து விசாரணை நடத்தி, இந்திய மாலுமிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.


;