tamilnadu

img

நெல்லை முன்னாள் மேயர் கொலை... மதுரை திமுக பெண் பிரமுகரிடம் விசாரணை

நெல்லை:
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட திமுக மகளிர் அணி துணைச் செயலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்த உமா மகேஸ்வரி(62).  இவரது  கணவர் முருகசங்கரன் (72). இவர்களது வீட்டுப்பணிப்பெண் ஆகியோரை ஒரு கும்பல் கொலை செய்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில்   நெல்லை மாநகர காவல்ஆணையர்  பாஸ்கரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரிடம்  விசாரணை  நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேஸ்வரி பண வாங்கியிருந்தார் என்பது உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

;