tamilnadu

img

மயிலாடுதுறை விரைவில் புதிய மாவட்டமாகும்... முதல்வர் அறிவிப்பு

நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்- ஒரத்தூரில், ரூ.367 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும்  தமிழக அரசின் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற திட்டப் பணிகள்துவக்கவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சனிக்கிழமை காலை 11 மணிக்குத்துவங்கியது.தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் துவக்கிவைத்து, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனின்  வாழ்த்துச் செய்திஒலிபரப்பப்பட்டது.தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அரசின் சாதனைகளைக் குறிப்பிட்டு உரையாற்றியபோது, “மயிலாடுதுறையைத் தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டமாக்க வேண்டும் என்று,அந்தமக்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ‘அம்மா’ ஆட்சிக் காலத்திலும் இதனை நாங்களும் வலியுறுத்தி வந்துள்ளோம். தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாகும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

;