tamilnadu

img

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாலிபர் சங்கம் மனு

அவிநாசி, ஜூலை 1- அவிநாசி அருகே தேவராயன்பாளையத்தில் சமுதாய நலக்கூடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தரக்கோரி வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட தேவராயன்பாளையத்தில் சமுதாய நலக்கூடம், தெருவி ளக்கு அமைத்தல் மற்றும் சுடுகாட்டிற்கு மதில்சுவர்  கட்டித் தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் சார்பில் பேரூராட்சி செயலரிடம் மனு அளிக்கப் பட்டது. இதில் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள்  பன்னீர், அணூப், கிளை நிர்வாகிகள் முத்துகுமார்  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;