tamilnadu

இடதுசாரிக் கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சிபிஎம் வாழ்த்து

திருநெல்வேலி, ஜூன் 10- ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7500 ரூபாய், மாநில அரசு 5000 ரூபாயும் வழங்க வேண்டும், ரேசன் பொருட்கள் முறையாகக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 100  நாள் வேலை வாய்ப்பை உத்தரவாதப்ப டுத்த வேண்டும், பேரூராட்சி பகுதிக ளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ஊர டங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 128 மையங்களில் நடந்த ஆர்ப்பாட்ட-போ ராட்டங்களில் 1074 பேர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.  நெல்லை டவுணிலும், திப்ப ணம்பட்டியிலும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு மாலையில்  விடுவிக்கப்பட்டனர். இந்த இயக்கத் தில் கலந்து கொண்டவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என மாவட் டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தெரி வித்துள்ளார்.

;