tamilnadu

img

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை, போட்டித் தேர்வுகளுக்கு செல்ல அனுமதி!

முழு ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஜன.6) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை, போட்டித் தேர்வுகளுக்கு செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு, அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;