districts

img

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 வரை நீட்டிப்பு  

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.  

புதுசேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்த நிலையில் நவம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் நாளை முதல் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கோவில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. 

;