tamilnadu

img

ஸ்டான் சாமி அஸ்திக்கு முதலமைச்சர், பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை....

சென்னை:
சென்னை வந்த மனித உரிமை செயல் பாட்டாளர் ஸ்டான் சாமி அஸ்திக்கு முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்த ஸ்டான் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி, சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரான ஸ்டான் சுவாமி, பெங்களூரில் உள்ள ஜெசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடினார். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காகப் பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பழங் குடியினர் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். ஜார்க்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டான் சுவாமி தனது வாழ்க்கையை அர்ப் பணித்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகவும், நில உரிமைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்தவருமான அருட் தந்தை ஸ்டான் சாமியை பாஜக ஆட்சியாளர்கள் ஊல்பா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 84 வயதான அவர் பார்க்கின் சன் நோயால் பாதிக்கப்பட்டு, தண்ணீரைக் கூட தானே அருந்துவதற்கு சிரமப்படக் கூடிய நிலையில், கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு சிறை வழிகாட்டுதல்களையும் மீறி சிறைக் கொடுமைகளை அனுபவித்து வந்த அவர். சிறைச்சாலையிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூலை 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவரது அஸ்தி தமிழகம் வந்தடைந்தது. அதன் துவக்க நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிறன்று (ஜூலை 18) நடைபெற்றது, அவரது அஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச் சர் க.பொன்முடி, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கனிமொழி, சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் இருதயராஜ், சிந்தனைச் செல்வன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டப் பொறுப்பாளர்கள் வெற்றிராஜன், மணிகண்டன், ஜான், செம்மல், சூசை மைக்கேல், உசேன், அண்ணாமலை, வர்கீஸ், அந்தோணி, வின்சன்ட் பால்,ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

;