tamilnadu

img

திமுக பிரமுகர் வீட்டில் மதுபாட்டில்கள் வீச்சு -காவல்துறை விசாரணை

கோவை, ஜூன் 26- கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி இல்லத்தின் மீது மதுபாட்டில் வீசிய மர்ம நபர் கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின் றனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாள ராக இருப்பவர் முத்துச்சாமி. இவரது இல்லம், கோவைப்பு தூர் கோகுலம் காலனி பகுதியில் உள்ளது. இந்நிலையில் வியாழனன்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பும், பின்பும் மது பாட்டில் வீசப்பட்டு உடைந்து கிடந்தது.

மேலும், வாசலின் முன்பு போடப்பட்டிருந்த கூரையின் மேலும் ஒரு மது  பாட் டில் வீசப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, முத்துச் சாமி காவல்துறையினருக்கு புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கி டையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திமுகவினர் அப்ப குதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

;