tamilnadu

பெண் சாவில் சந்தேகம் காவல்துறை விசாரணை

தஞ்சாவூர் ஜூன்.2-தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புதாசன்(30) விவசாயி. இவருக்கும் வேதாரண்யம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்- கல்யாணசுந்தரி தம்பதி மகள் கார்த்திகாவுக்கும்(25) கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அன்புதாசனுக்கும், கார்த்திகாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திகா சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கார்த்திகா உயிரிழந்தார். இறந்து போன கார்த்திகாவின் தாயார் கல்யாணசுந்தரி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;