tamilnadu

img

காலமானார்

திண்டுக்கல், மே 5- தீக்கதிர் நாளிதழின் பழனி நிருபர் மாலதியின் கணவர் சாய் அசோகன் செவ்வாயன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 53.  திண்டுக்கல்லில் உள்ள மத்திய கலால் வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவர்களுக்கு கார்த்தியாயினி என்ற மகளும், அஜய் துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர்.  

அவரது மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே பாலபாரதி, என் பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி,  தீக்கதிர் நிருபர்  முருகேசன்  உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 2 மணி அளவில் மின் மயானத்தில் சாயா அசோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இரங்கல்

அன்னாரது மறைவுக்கு தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், முதன்மை பொது மேலாளர் கே.கனகராஜ், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபாரதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;