states

img

முஸ்லிம் சிறுமியைக் கடத்தி கட்டாயத் திருமணம் - மதமாற்றம்.... ஆர்எஸ்எஸ் - விஎச்பி தலைவர்கள் கைது....

அகர்தலா:
முஸ்லிம் சிறுமியைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்த குற்றத்தில், ஆர்எஸ்எஸ் - விஎச்பி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் அருகில் உள்ள கிசண்டண்ட்டிலா பகுதிக்கு உட்பட்ட சாரிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது முஸ்லிம் மாணவி.பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தஇவரை, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான சுமன் சர்க்கார் என்ற இந்துஇளைஞர் கடந்த ஜூலை 24-ஆம் தேதிகடத்திச் சென்றுள்ளார். மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், சுமன் சர்க்கார் மீது வழக்கு பதிவு செய்து, 45 நாட்களாக தேடி வந்துள்ளனர்.விசாரணையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர்தபன் தேவ்நாத், விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் சந்திர சேகர் கர் ஆகியோர் தான், மாணவியைக் கடத்தி சர்க்கார் என்ற இளைஞருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரிய வந் துள்ளது. மேலும் அந்த முஸ்லிம் சிறுமியைக் கட்டாய மதமாற்றமும் செய்துள்ளனர்.

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தலைவர் தபன் தேவ்நாத், விஎச்பி தலைவர்சந்திர சேகர் கர் உட்பட 5 பேரை செபாஹிஜாலா மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தமாணவியை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், ஆள் கடத்தல் மற்றும்கட்டாய திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஆர்எஸ்எஸ் -விஎச்பி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;