districts

மதுரையில் முறைகேடு நெல்கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு

மதுரை, பிப்.24-  முறைகேடுகள் நடைபெறும் நெல்கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். விவசாயி கள் குறைதீர் கூட்டம் மதுரை ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அனிஷ் சேகர். வேளாண் இணை இயக்குநர் விவே கானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள் முதல் நிலையங்களில் அதிகளவு முறைகேடுகள் நடக்கிறது. குறிப் பாக கள்ளிக்குடி பகுதி திருமால்,  குலமங்கலம், அலங்காநல் லூர் மேட்டுப்பட்டி, திருவாலவாய நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.65 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு நெல்கொள்முதல் நிலை யங்களில் தனியார்கள்  தலையீடு செய்கின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும் நடவ டிக்கை எடுப்பதில்லை.  வைகை அணையில் இந்த ஆண்டு நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி இந்த ஆண்டு வைகை அணையை உடனடியாக தூர்வார வேண்டும். தற்போது அதிகளவில் அணையில் சகதி உள்ளது. எனவே உடனடியாக வைகை அணையில் தேங்கி உள்ள வண்டல் மண்ணை அகற்றி சீரமைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றனர்.  கேள்விகளுக்கு பதிலளித்த ஆட்சியர், நெல்கொள்முதல் நிலை யங்களில் முறைகேடு நடக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளது. புகார் கூறப்பட்ட நெல்கொள்முதல் நிலை யங்கள் மூடப்படும். மேலும் தனியார் தலையிட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.  ஆவின் அலுவலர்கள் பேசும் போது, ஆவினில் தற்போது பயனா ளர்களின் வங்கி கணக்கில்தான் பணம் செலுத்தப்படுகிறது. எனவே முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் எந்த இடத்தில் முறை கேடு நடக்கிறது என்பதை தெரி வித்தால் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றனர்.

;