districts

பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு

குடவாசல், நவ.25- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் செங்குந்தர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷா வட்டாரக் கல்வி அலு வலரின் முன்பு எளிய முறையில் 11 முதல் 99 வரை உள்ள பெருக்கல் வாய்ப்பாடுகளை கரும்பலகையில் எழுதிக் காட்டினார். இதே போல் 4-ஆம் வகுப்பு பயிலும் ரோகித், நவீன் குமார், முத்துவேல், பவுத்திரன், சக்தி ஆகிய மாணவர்க ளும் எழுதி காட்டினர். பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர் குமரேசன் மாணவர்களை பாராட்டினார்.  மேலும் ‘‘பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்பு மாண வர்களும் இல்லம் தேடிக்கல்வி மையத்திற்கு செல்ல வேண்டும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்’’ என்றார்.

;