districts

img

பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் முற்றுகையிட முயன்ற விசிக

தாராபுரம், மே 28- தாராபுரம் அரபிந்தோ சிபிஎஸ்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி முகாம் நடத்துவதை கண்டித்து அப் பள்ளியை முற்றுகையிட முயன்ற விசிகவினரை போலீசார்  தடுத்து நிறுத்தினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - அலங்கியம் சாலையில் செயல்பட்டு வரும் அரபிந்தோ சிபிஎஸ்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி சனியன்று பள் ளியை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

;