tamilnadu

img

தமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவிலும்  900க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.   இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மேலும் 2 பேருக்கு  கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாம் கட்டத்திற்கு சென்றுள்ளது என  உறுதிப்படுத்தி உள்ளார். 
 

;