tamilnadu

img

மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக்  கண்டித்து ஆர்ப்பாட்டம்

உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைகளை உயர்த்தும் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக்  கண்டித்து சிஐடியு சார்பில் மறைமைலை நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கை பொதுதொழிலாளர்  சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சேசாத்திரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட  செயலாளர் டி.பாபு,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் என்.பால்ராஜ், கலைச் செல்வி,  சிஐடியு மாவட்ட துணைச்  செயலாளர்கள் கே.வேலன், செல்வராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி எம்.வெங்கடேசன், விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், போக்குவரத்து ஊழியர் சங்கம் நிர்வாகி நாராய ணன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார் பேசினார்.

;