tamilnadu

img

வலைப்பதிவு - ஆட்டை வெட்டுவதற்கு முன்பு

ஆட்டை  வெட்டுவதற்கு முன்பு

பெட்ரோல் விலை ரூ.8.5 அளவுக்கு/டீசல் விலை ரூ.9.5 அளவுக்கு தொடர்ச்சியாக 17வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? எண்ணெய் நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. ஆட்டை வெட்டுவதற்கு முன்பு அதனை கொழுக்க வைக்க வேண்டியுள்ளது. கேரளாவில் கல்வியாண்டு முனைப்புடன் தொடங்கப்பட உள்ளது. தொலைக்காட்சியில் அரசாங்கத்தின் கல்வி சேனலில் பாடங்கள் நடத்தப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல்  வசதி உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. 50,000 உள்ளூர் கல்வி கற்றல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 10 இலட்சம் மடிக்கணினி களுக்கு நுண் நிதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங் கள் வீடுகளுக்கு சென்று தரப்படுகின்றன. மதிய உணவுக்கான அனைத்து பொருட்களும் வீடுகளுக்கு சென்று தரப்படுகின்றன.

- டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக், கேரள நிதி அமைச்சர்

இந்த கோமாளிகள் முதலில் வட கொரியாவின் கிம் ஜோங் உன் படத்தை வைத்து சீன பிரதமர் என அசன்சோல் நகரில் எரித்தார்கள். இப்பொழுது  கொல்கத்தாவில் அமெரிக்க வரைபடத்தை வைத்துக் கொண்டு சீனாவை புறக்கணிப்போம் என கூறுகின்றனர்.

- முகம்மது சலீம், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

சீத்தாராம் யெச்சூரி சீனாவின் ஏஜெண்ட் எனும் பொய் போல ஏராளமான அவதூறு செய்திகளை கேவலமான முறையில் காவிக் கூட்டத்தின் பொய்யர்கள் பரப்ப முயல்கின்றனர். மோடி அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே இந்த கேடுகெட்ட செயல்கள். அவர்கள் மீது அனைத்து மாவட்டங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

- அசோக் தாவ்லே,  சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

 

;