tamilnadu

img

விட்றாதீங்க யப்போ...

வாக்குப்பதிவு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க சமூக ஊடகங்களில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்களும் தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருந்தன. அவற்றில் ஒன்று “விட்றாதீங்க யப்போ...” என்ற டேக்குடன் டாக்டர் நாகஜோதி பதிவிட்டது. “டாக்டர் அனிதாவுக்காக, ஆசிபாவுக்காக, நீட் தேர்வால் பலியான மாணவர்களுக்காக, பணமதிப்பிழப்பால் ஏடிஎம் வாசலில் நின்று செத்துப்போன சாமானியர்களுக்காக, மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக்கப்பட்டு தெருவழியே இழுத்துச் செல்லப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்காக, தெருவில் இறங்கி போராடும் விவசாயிகளுக்காக, விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவி விவசாயிகளுக்காக, மதவெறிக்கு பலியான நம் சகோதர சகோதரிகளுக்காக மதச்சார்பற்ற நம் நாட்டிற்காக, வாக்களிப்போம் பாசிசத்திற்கு எதிராக... விட்றாதீங்க யப்போ...!”

;