tamilnadu

img

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! - சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி, தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:
"மதுரை விமான நிலையம் 2023 - ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என விமானத்துறை அறிவித்தது. ஆனால் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதை 24 மணி நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;