பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தனது வாக்கினை செலுத்த முடியவில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறார். வாக்குச்சாவடிக்கு ஆர்வத்தோடு வாக்களிக்க வந்த அவர், பட்டியலில் தனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் வேதனையுடன் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறேன். இப்போது எனது மனைவி பெயர் மட்டும் பட்டியலில் உள்ளது, எனது பெயர் இல்லை என்கிறார்கள். வாக்களிக்க முடியவில்லை என்பதை நினைக்கும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது. இந்தத் தவறு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.