tamilnadu

img

சிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்

ராய்ப்பூர்:
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருவதை போல, சமையல் எரிவாயு சிலிண்டர்விலையை, மாதந்தோறும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததால், 2019 டிசம்பர், 2020 ஜனவரிஆகிய 2 மாதங்கள் மட்டும் எரிவாயுசிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.ஆனால், தேர்தல் முடிந்த கையோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ஒரேயடியாக 147 ரூபாய் அளவிற்கு அதிகரிக்கப்பட்டது. இதனால் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை, 881 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. 

“சர்வதேச சந்தை நிலவரம், எரிவாயு சிலிண்டருக்கான தேவை ஆகியவற்றின் காரணமாகவே விலை உயர்ந்துள்ளது” என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அப்போது விளக்கம் அளித்தார்.இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வந்த தர்மேந்திர பிரதானிடம், எரிவாயு விலை உயர்வு பற்றி,செய்தியாளர்கள் மீண்டும் கேள்விஎழுப்பினர். அப்போது, “குளிர்காலங் களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு அதிகரிப்பதால், அதற்கானதேவையும் அதிகரித்து, எரிவாயுத் துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது;இதனால்தான் அதன் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற் பட்டது” என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.மார்ச் மாதத்தில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ள பிரதான், “குளிர் உச்சத்தில் இருந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் விலை உயர்த்தப்படாதது ஏன்?” என் பது தொடர்பாக விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

;