tamilnadu

img

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்...

ஜம்மு 
இந்தியாவில் ஊரடங்கு விதித்து கொரோனவை விரட்டத் தீவிர கண்காணிப்பில் மத்திய மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி மற்றொரு தலைவலியை உருவக்காக்கி வருகின்றனர். 

கடந்த வாரம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற பொழுது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலியாகினர். பாதுகாப்புப்படை தரப்பில் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், காஷ்மீரின் குல்காம் நகரில் டி.எச். போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக்க காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.  பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

;