tamilnadu

img

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு அண்மையில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து அறிவித்தது.இதனை தொடர்ந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்கக்கூடாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களை சுற்றியுள்ள கிராமங்கள், கடைகள்,உணவகங்கள் போன்றவற்றில் ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வழியுறித்தி, விழிப்புணர்வை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.
 

;