tamilnadu

img

மசூதியை இடித்த கரசேவகர்களை ‘தியாகிகளாக’ அறிவியுங்கள்...

அயோத்தி:
அயோத்தியில் இடிக்கப்பட்டது மசூதி அல்ல என்று உச்சநீதிமன்றமே கூறி விட்டதாகவும், எனவே,  பாபர் மசூதியை இடித்ததாக தொடரப்பட்ட வழக்கை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்து மகாசபை கூறியுள்ளது.இதுதொடர்பாக, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு, இந்து மகாசபையின் தலைவரும் சாமியாருமான சக்கரபாணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“அயோத்தி வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள் ளது. அந்த இடத்தில் இடிக்கப் பட்ட கட்டடத்தின் மேல்பகுதி கோயில் எனவும், அது பாபர் மசூதி அல்ல எனவும் தெரிவித்துள்ளது. எனவே பாபர் மசூதியை இடித்துவிட்டதாக கூறி குற்ற வழக்கு தொடர்ந்துள்ளது செல்லுபடி யாகாது.கரசேவகர்கள் கோயிலின் ஒரு பகுதியை தெரியாமல் இடித்துள்ளனர். எனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மேலும், 1990 மற்றும் 1992-ஆம் ஆண்டு கரசேவையின்போது கொல்லப்பட்ட கரசேவகர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு சாமியார் சக்கரபாணி கூறியுள்ளார்.

;