tamilnadu

img

சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி – முதலமைச்சர்  

புதுக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ரோந்து பணியில் இருக்கும்போது எஸ்.ஐ மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

;