tamilnadu

img

நீலகிரி: 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து  

நீலகிரியில் 22ஆவது கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

நாமக்கல் மாவட்டம் செல்லப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 7 மாணவர்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது 22வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராவிதமாக கார் கட்டுப்பாடு இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இதில் படுகாயமடைந்த புகழேந்தி, ராஜ்குமார், கவுதம், தென்னரசு, பிரவீன் குமார் உள்ளிட்ட 7 பேரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து பொதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;